சென்னை, நவ. 22- சமையல் எரிவாயு சிலிண்ட ருக்கான தொகையை முழுமை யாக வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நவம்பர் 29ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள் ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில துணைத்தலைவர் பே.பேயத் தேவன் தலைமையில் திங்க ளன்று (நவ. 21) நடைபெற்றது. பொதுச்செயலாளர் அ.மலர்விழி வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் ெஜசி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு பேசினார். உணவு தயாரிப்பு முன் மானி யம் வழங்க வேண்டும், எரி வாயு சிலிண்டருக்கான தொகையை முழுமையாக வழங்க வேண்டும், பணியில் இருக்கும்போது இறந்த ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலி யாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கொரோனா தொற்று காலத் தில் காலாவதியான உணவுப் பொருட்களை பள்ளி சத்துணவு மைய இருப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அரசு பெண் ஊழியர் களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக தமிழக அரசு அறிவித்து அனைத்து அரசு ஊழி யர்களும் ஊதியம் பெற்ற நிலையில் சத்துணவு ஊழியர்க ளுக்கும் உடனே வழங்க வேண்டும். அனைத்து சமையல் உதவியாளர்களையும் சமை யலாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள சமூக நலத்துறை இயக்குநர் அலுவல கம் (பனகல் மாளிகை சைதாப் பேட்டை) அருகே கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.