states

72 இடங்களில் கொப்பறை தேங்காய் கொள்முதல்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் 72 நிலையங்களில் கொப்பறை தேங்காய் கொள்முதல் செய்ய  அரசு அனுமதி வழங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் ரூ. 640 கோடி மதிப்பிலான 56 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பறைத் தேங்காயை ஒன்றிய அரசு அறிவித்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில், தேசிய  வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத் துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவற்றை செயல்படுத்தும் வகை யில் 72 முதன்மை கொள்முதல் நிலையங்க ளில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையத் தால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இப்போது அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. 

;