states

கடைகளில் காபி-மசாலா வகைகள் விலை உயரும்

விருதுநகர், மார்ச் 12- விருதுநகர் சந்தையில் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 12 அன்று பட்டியல் வெளியிடப்பட்டது.   கடந்த வாரம் 15 கிலோ பாமாயில்  விலையானது ரூ.1560 என்ற விலை யில் இருந்தது. தற்போது டின் ஒன்  றுக்கு ரூ.50 குறைவு ஏற்பட்டு ரூ. 1510க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் முண்டு வத்தல் 100  கிலோ ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயி ரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.7ஆயிரம் வரை உயர்வு ஏற்பட்டு   ரூ.19ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை  விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் புதுஸ் நாடு வகை வத்தல்  கடந்த வாரம் 15ஆயிரம் முதல் 20  ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட் டது. திடீரென ஒரே வாரத்தில் ரூ. 3500 வரை உயர்வு ஏற்பட்டு தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.18,500 முதல் 21 ஆயிரம் வரை விற்கப்படு கிறது. இதனால், அரைத்து பாக்  கெட்டுகளில் விற்கப்படும் மசாலா  வகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. பாசிப் பருப்பு : கடந்த வாரம் துவ ரம் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை கடு மையாக உயர்ந்தது. பாசிப்பருப்  பின் விலை சற்று குறைந்திருந்தது. ஆனால், இந்த வாரம் பாசிப்பருப் பின் விலை உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பருப்பு ரூ.9800க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ. 500 உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ. 10,300க்கு விற்கப்படுகிறது. காபி விலை கடும் உயர்வு: கடந்த  வாரம் 50 கிலோ காபி பிளாண்டேசன் பி.பி வகையின் விலை ரூ.18500க்கு  விற்கப்பட்டு வந்தது.இந்நிலையில், ஒரே வாரத்தில் ரூ.1600 உயர்வு ஏற்  பட்டு தற்போது ரூ.20,100க்கு விற் கப்படுகிறது.

மேலும் காபி பிளாண்டேசன் 50 கிலோ ஏ வகையின் விலை கடந்த  வாரம் ரூ.19 ஆயிரத்திற்கு விற்கப் பட்டு வந்தது. இந்த வாரம் ரூ.1600 உயர்ந்து தற்போது ரூ.20,600க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சி  வகை காபி பிளாண்டேசன் ஒரே வாரத்தில் ரூ.1300 உயர்ந்து ரூ. 17300க்கு விற்கப்படுகிறது. ரோபஸ்டா பி.பி 50 கிலோ கடந்த வாரம் ரூ.9800க்கு விற்கப்பட்டு வந்த  நிலையில், தற்போது ரூ.900 உயர்வு  ஏற்பட்டு ரூ.10,700க்கு விற்கப்படு கிறது. மேலும், ரோபஸ்டா 50 கிலோ  கடந்த வாரம் ரூ.8500க்கு விற்பனை  செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ. 1100 உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே,  தற்போது ரூ.9600 க்கு விற்கப்படு கிறது. இதன் காரணமாக, ஹோட் டல்கள் மற்றும் கடைகளில் காபி யின்  விலை அதிகரிக்கும் நிலை ஏற்  பட்டுள்ளது. இதனால், காபி பிரி யர்கள் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். அதேவேளை, பிற அத்தியாவசி யப் பொருட்களின் விலையில் எவ் வித மாற்றமும் ஏற்படவில்லை.