states

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

சென்னை,அக்.28- கடலூரில் பத்திரிகையாளர் களை தரக்குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (எம்.யூஜே), தமிழ்நாடு பத்திரி கையாளர் சங்கம் (டி.யூ. ஜே), பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்) ஆகியவை கண்டனம் தெரி வத்துள்ளன. அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து செய்தியாளர்கள் கேள்வி  கேட்க முயன்ற போது அண்ணா மலை தரக்குறைவாக பேசியிருக் கிறார்.  அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவர் பத்திரிகை யாளர்களை அநாகரிகமாகவும், இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசி வருவது மிக மோசமான முன்னுதாரணமாகும். எனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தப் போக்கை நிறுத்திக் கொள்வதுடன், தரக் குறைவான தம்முடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் களப்பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களின் கண்ணியத்தைக் காக்கும் பொறுப்பு இருப்பதை நிறுவனங்க ளும் உணர்ந்து, இது போன்ற செயல்களுக்கு எதிர்ப்புத் தெரி விக்க வேண்டும்”எம்யூஜே தலைவர் எல்.ஆர்.சங்கர், பொதுச் செயலாளர்  மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு மாநில அமைச்சரை  ஒருமையில் கேவலமாக பேசுவதுடன் பத்திரிகையாளர் களை கொச்சைப்படுத்துவது வாடிக்கையாக கொண்டிருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கு, பத்திரிகையாளர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் இதுபோன்ற அரு வருக்க தக்கசெயலை அண்ணா மலை நிறுத்தகொள்ள பத்திரிகை யாளர்களும் அனைத்து ஜனநாயக  அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும் என்று டியூஜே மாநிலத்  தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்த மன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் செய்தியாளர்கள் கேள்விகேட்க முயன்றபோது ஆத்திரமடைந்த பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சனம் செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வலியுறுத்தியுள்ளார்.