பிரேசிலின் புதிய அமைச்சர்களின் பெயர்களை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அறிவித்துள்ளார். இதில் 37 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஜனவரி 1, 2023 அன்று லூலா ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அவரோடு துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க வுள்ள ஜெரால்டோ ஆல்க்மின், வளர்ச்சி, தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் சாவ் பாவ்லோ மாகாணத்தின் ஆளுநராகத் தொடர்ந்து நான்கு முறை பணியாற்றியுள்ளார்.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தின் வன்முறை அதிகரித்தே வருகிறது. அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் 23 வயதான பாலஸ்தீன கால்பந்து ஆட்டக்காரர் அகமது தராக்மா இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார். துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதில் உயிரிழந்தார். அந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 25 பேர் காயமடைந்த னர். இந்தப் படுகொலையை சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் கண்டிக்க வேண்டும் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டயே கோரிக்கை வைத்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளுக்கான புதிய மசோதா ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 16 வயது நிறைவு பெற்ற யார் வேண்டுமானாலும் தங்கள் அடையாள அட்டைகளில் பாலினத்தை மாற்றிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மசோதாவுக்கு ஆதரவாக 188 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பதிவாகின. அடுத்தகட்டமாக, செனட் அவையில் இந்த மசோதா முன்வைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளி யன்று 5,500 விமானங் கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 22 ஆயிரம் விமானங்கள் தாமதமாக வந்தன. பனிக்குவிய லால் முக்கிய நெடுஞ் சாலைகளும் மூடப் பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம் என்ப தால் திட்டமிட்ட பய ணங்களை மேற்கொள்ள முடியாமல், ஷாப்பிங் செய்ய முடியாமல் பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போ னை போலீசில் ஒப்படை க்க வேண்டும். அரசு வழக்கறிஞரிடம் ஒப்ப டைக்க அனுமதி கிடை யாது என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள சென் னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டி அரசுப் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
பார்வையற்றோருக்கான டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற் றிய இந்திய வீரர்களை குடியரசுத் தலைவர் திர வுபதி முர்மு வெள்ளி யன்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 8 மாதங்களில் மட்டும் காணிக்கை ரூ.1000 கோடியை கடந்துள்ளது. 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறி வித்துள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு ஜாமீன் வழங்கி லக்னோ உயர் நீதிமன்றம் உத்தரவு. உத்தரப்பிரதேச அரசு பதிவு செய்த உபா (UAPA) வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் உச்சநீதிமன்றம் வழங்கி யிருந்தது.
சனியன்று தில்லியில் நடைபெறும் “இந்தியா ஒற்றுமை” யாத்திரையில் பங்கேற்கும் பொது மக்கள், கட்சித் தொண்டர் கள், தலைவர்கள் முகக் கவசம் அணிந்து வரு மாறு தில்லி காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தல்.
புதிய இந்தியாவை படைப்போம்... வாருங்கள்... என்னை “சக மனிதராக” பங் கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கிறேன் என்றும் தில்லி வாழ் தமிழர்கள் திரளாக கலந்துகொள்ளு மாறும் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள் ளார் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன்.