கஞ்சா கடத்தியதாக விஏஒ கைது
புதுக்கோட்டை,பிப்.19- புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் நடைபெறு வதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர், ஆலங்குடி அருகே யுள்ள கேப்பரை முக்கத்தில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட தில் சுமார் 1.700 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காரிலிருந்த மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆலங் குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சியைச் சேர்ந்த டி.ஜெயரவி வர்மா(34) கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் ஊர்க்காவல் படைவீரர் ஆட்டாங்குடியைச் சேர்ந்த எல்.கணேசன் (45), காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சேர்ந்த ஆர்.சூர்யசந்திர பிரகாஷ்(31) என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் காவல்துறை யினர் கைது செய்து, கஞ்சா, கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வல்லத்திராகோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
1100 ஆண்டுக்கு முன்பே சொத்து கணக்கு: காஞ்சிபுரம் அருகே கல்வெட்டில் தகவல்
காஞ்சிபுரம்,பிப்.19- காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்தது பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. மரியாதை நிமித்த வாக்கியமான “பெருமக்கள்” என வாரிய பொறுப் பாளரை அழைத்துள்ளனர். அவர்கள் நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடு வதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்த தகவலும் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்திருக்கிறது. இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சி யாளர் அஜய்குமார் கூறியதாவது:- 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்ட றியப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பத விக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து ள்ளனர். இந்த செய்தி கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள் ளது. அதுமட்டுமல்ல, இரண்டு ஆண்டு கள் மட்டுமே ஒருவரின் பதவிக்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு முறை தேர்வு செய்யப்படுபவர் மறு முறை மீண்டும் போட்டியிட முடி யாது. மேலும் ஏரி வாரியம், சம் வத்சர ஆண்டு வாரியம் என இரண்டு வாரி யங்கள் செயல்பட்டு வந்ததும் குறிப்பி டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாரியப் பெரு மக்கள் கணக்கு காட்ட வேண்டும் என்றும், வாரியப் பணிகளை செய்யா மல் இருத்தல் கூடாது என்றும் குறிப்பி டப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்த்தி வேந்திராதிபதி மற்றும் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்கள் இந்த கோவிலில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம்’ : முதல்வர்
சென்னை, பிப்.19- தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூ லங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த ‘தமிழ்த்தாத்தா’ டாக்டர் உ.வே.சா பிறந்தநாள். அவர் நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய் வோம்! தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் தொகை வசூலா?
செங்கல்பட்டு,பிப்.19- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்த கம் வட்டத்திற்குட்பட்ட குன்னங் குளத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சி யர் ராகுல்நாத் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந் தித்த ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் 2,271 நேரடி கொள்முதல் நிலை யங்கள் செயல்பாட்டில் உள்ளது. ஜனவரி கடைசியிலும், பிப்ரவரி தொடக் கத்திலும், டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக நாள் ஒன்றுக்கு 49 ஆயிரம் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றார். கொள்முதல் செய்யும் நெல் மூட்டை களுக்கு கூடுதலாக தொகை வசூல் செய்யப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து அதை கண்காணிக்க நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர் பான புகார்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் - 9444051540, அலு வலக தொலைபேசி எண்.044-27420071, மேலாண்மை இயக்கு நர்-1800-599-3540, 044-26421663, 26421665 ஆகிய தொலைபேசி எண் களை தொடர்பு கொண்டு அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிரம விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
விழுப்புரம்,பிப்.19- விழுப்புரம் குண்டலப் புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தை கேரளா மாநிலம், ஆழக்கூடா பகு தியை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் காணாமல் போனவர்கள் பற்றி தினந்தோறும் காவல் துறை புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற் கிடையே ஆசிரமம் தொடர் பான வழக்கு சிபிசிஐடி மாற்ற ப்பட்டுள்ளது. இந்த நிலை யில், சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வா ளர்கள் கொண்ட குழு அமை க்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை திங்க ளன்று(பிப்.20) தொடங்கும்.
குடியரசுத் தலைவரின் வெலிங்டன் பயணம் ரத்து
கோவை,பிப்.19- கோவையிலிருந்து வெலிங்ட னுக்கு செல்லும் குடியரசுத் தலைவ ரின் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு முதன்முறை யாக பிப்ரவரி 18 அன்று வருகை தந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபட்டார். கோவை ஈஷா வளாகத்தில் நடந்த மகா சிவராத்திரி விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன் னூர் அருகே வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூரியில் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் கலந்துரையாடல் நிகழ் வில் பங்கேற்பதற்காக குடியரசு தலை வர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18 அன்று கோவைக்கு வந்தார். ஈஷா வளாகத் தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். பிப்ரவரி 19 அன்று காலை 9.25 மணிக்கு கோவை விமான நிலை யத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூ ரிக்கு செல்வதாகவும், அங்கு கலந்து ரையாடலில் குடியரசு தலைவர் உரை யாற்றுவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காலையில் இருந்தே நீலகிரியில் வானிலை மேகமூட்டமாக இருந்தது. மோசமான வானிலை கார ணமாக குடியரசு தலைவரின் ஹெலி காப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், சாலை வழியாக செல்ல வும் திட்டமிடப்படவில்லை. எனவே, குடியரசு தலைவரின் வெலிங்டன் பய ணம் ரத்து செய்யப்பட்டது.