states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரபல உணவு ஆர்டர் நிறுவனமான ஸ்விக்கி சுமார் 6,000 (8-10%) ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

ஃபியட் கரன்சிகள் வீழ்ச்சி யடையும் வேளையில், கிரிப்டோகரன்சிகள் அவற்றின் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற கருத்து முட்டாள் தனமானது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான உசைன்  போல்ட்டின் (ஜமைக்கா) முதலீட்டு கணக்கில் வைத்திருந்த ரூ.103 கோடி மாயமாகி, கணக்கில் வெறும் 97 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ள நிலையில், புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஒரு வேட்பா ளர் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தொகுதிக்குள் அதிகபட்ச மாக ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையை சேர்ந்த வர்களின் குடும்பத்தா ருக்கு, காவல்துறை பணி களில் 10% இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாஜக எம்பி யும், மல்யுத்த சம்மேளனத்  தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்கை பதவியில் இருந்து நீக்கி, அவர் மீது துரித நட வடிக்கை எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டையே உலுக்கிய உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பாலியல் வன் கொடுமை வழக்கில் கை தான பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கா ருக்கு மகளின் திருமணத் தில் பங்கேற்பதற்காக தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மாவட்ட நீதிபதிகள் மூவர், மூத்த வழக்கறி ஞர்கள் 5 பேர் என 8  பேரை சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர் களுக்கான டுவிட்டர் ப்ளூ டிக் கட்டணமாக மாதம் 11 டாலர் (ரூ.895) விலை நிர்ணயம் செய் யப்பட்டுள்ளதாகவும், ஒரு வருடத்திற்கு 84 டாலர் (ரூ.6,834) செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், விருதுநக ரில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரி ழந்த 3 பேரின் குடும்பங் களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் பெரும் அழிவைத் தந்து  வரும் வேளையில், அதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் பற்றி குழப்பம் நிலவி வருகிறது. அண்மையில் நியூயார்க் இயற்றிய துப்பாக்கிகள் கட்டுப்பாடு சட்டத்தை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது. இதுவரையில் அமெரிக்காவின் பல நீதிமன்றங்களில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றன.

புதிய உத்திகள் பற்றிய ஆய்வுடன் கூடிய கூட்டு விமானப்படைப் பயிற்சியில் ரஷ்யாவும், பெலாரசும் ஈடுபட்டுள்ளன. போரின் போது முனைப்பை அதிகரிக்கும்படியான உத்திகள் பற்றி இதில் பரிசோதித்து வருகிறார்கள். பிப்ரவரி 1-ஆம் தேதி வரையில் இந்தப்  பயிற்சி தொடரவிருக்கிறது. வான்வழி நடவடிக்கை, எல்லைகளில் கூட்டு ரோந்து, தரைப்படைகளுக்கு வான்வழி ஆதரவு, சரக்கு விநி யோகம் மற்றும் காயமடைந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்று வது உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

உலகின் பல பகுதிகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 3 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. 2022-ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருந்தது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், 2.9 விழுக்காடு என்ற வளர்ச்சி குறைவு என்றாலும், நெருக்கடியான காலகட்டத்தில் இது நல்ல அம்சம் என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.