அகமதாபாத், ஜன. 27 - குஜராத் மாநிலம், மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் உயிரிழந்த சம்பவத்தில், காவல் துறை 1200 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ள நகரம் மோர்பி. இங்குள்ள மச்சூ ஆற்றின் குறுக்கே, 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மன்னர் வாக்ஜி தாகோரால் தொங்குப் பாலம் நிறுவப் பட்டது. 233 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில், ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட இப்பாலம், தர்பார்கர் அரண்மனை, லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைப்பதாகும். அண்மையில் இந்தப் பாலத்தை புனரமைத்து, 15 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, மோர்பி நகராட்சி நிர்வாகமானது, ஒரேவா என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. அந்த நிறுவனம் ரூ. 2 கோடியில் புனர மைப்புப் பணிகளை மேற்கொண்டது. இந்த பராமரிப்புப் பணிகள் முடிவடை ந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 26 குஜராத் புத்தாண்டு அன்று மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 30 அன்று ஞாயிற்றுக்கிழமை ‘விடுமுறை நாள்’ என்பதால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் பாலத்தைக் காண வந்தனர். அவர்களிடம், பராமரிப்பு ஒப்பந்த த்தைப் பெற்றுள்ள ஒரேவா நிறுவனம், பெரியவர்களுக்கு ரூ. 17, சிறியவர் களுக்கு ரூ. 12 என கட்டணம் பெற்றுக் கொண்டு பாலத்தில் அனுமதித்தது. மாலை 6.30 மணியளவில் 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தைப் பார்வை யிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தின் மீது நின்றிருந்த அனை வரும் ஆற்றில் விழுந்தனர்.
விமானப் படையின் கருடா வீரர்கள், கடற்படை வீரர்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீய ணைப்பு வீரர்கள், போலீஸார், உள்ளூர் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டும் 135 பேர் வரை பலியாகின. இவர்களில் 50-க்கும் அதிகமானோர் குழந்தைகள். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. “முதற்கட்ட விசாரணையில், பாலத்தை கேபிள்கள் எனப்படும் கம்பி வடங்களே தாங்கியிருந்த நிலையில், கம்பிவடம் உடைந்த இடத்தில் துருப்பிடித்து இருந்தது. பராமரிப்புப் பணி மேற்கொண்ட நிறுவனம், அந்து துருப்பிடித்த கம்பிவடத்தை சரி செய்திருந்தால் விபத்தைத் தடுத்திருக்கலாம். ஆனால், அந்த கம்பிவடத்தில் எண்ணெய் அல்லது கிரீஸ் கூட போடவில்லை. வெறுமனே பெயிண்ட் அடித்து தூக்கி நிறுத்தி விட்டார்கள்” என்பது தெரியவந்தது. சொல்லப்போனால் பராமரிப்புப் பணி நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்று கண்டறியப்பட்டது. எனினும், ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார், மூத்த பொறியாளர் கே.எம். படேல், அகமதாபாத் எல்.இ. பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் கோபால், சாலை, கட்டுமானத் துறை அதிகாரி சந்தீப் வாசவா, ஐபிஎஸ் அதி காரி சுபாஷ் திரிவேதி ஆகியோர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்தது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்துள்ளது. ஒரேவா நிறுவனத்தின் 2 மேலாளர்கள், பாலத்தைப் புன ரமைத்த 2 பொறியாளர்கள், 3 பாது காவலர்கள், 2 டிக்கெட் விநியோக ஊழி யர்கள் என 9 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் மோர்பி பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மோர்பி அமர்வு நீதிமன்றத் தில் காவல்துறையினர் 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 9 பேர் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், 10-ஆவது குற்றவாளியாக ஓரேவா குழுமத்தின் ஜெய்சுக் படேலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.