ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் பிரதமர் மோடி பேச்சு
புதுதில்லி, நவ. 7- இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து பிரதமர் நரேந் திர மோடி ஈரான் ஜனாதிபதி டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியுடன் பேசினார். “இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் உரை யாற்றியதாகவும் பயங்கர வாத சம்பவங்கள், வன்முறை மற்றும் பொது மக்கள் உயிர் இழப்பு ஆகி யவை தீவிர கவலைகளை தருவதாகவும், அதன் தீவிரத்தை தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் அமைதியை நிலைநாட்டு வது குறித்து பேசியதாகவும் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு: குறுஞ்செய்தி துவங்கியது
சென்னை,நவ.7- மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்த தகுதி யானவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.1 அனுப்பி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத் தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டது. இத்துடன் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான நபர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில்
சென்னை, நவ.7- தீபாவளியையொட்டி சென்னை யில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்தோர், அதிக அளவில் சொந்த ஊர் செல்வார்கள். ஏற்கெனவே, வழக்க மான ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டு கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளி லும் டிக்கெட் இல்லாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தாம்பரம்- நாகர் கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 10, 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவி லுக்கு இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து (06061) மாலை 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 9 படுக்கை வசதி கொண்ட பெட்டி கள், 6 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்பு ரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளி யூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல் நாகர்கோவில்- மங்களூரு இடையே வருகிற 11 மற்றும் 18 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மங்களூரு- தாம்பரம் இடையே 12, 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது. இந்த மூன்று ரயில்களுக் கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு
சென்னை, நவ.7- பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க பழனிசாமிக்கு விலக்கு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சி யத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகை பாலன் நியமனம் செய்யப்பட்டார். கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட தில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமு வேல் மீது பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மேத்யூ சாமுவேல் மீது 2019 ல் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
5-வது நாளாக சோதனை
சென்னை, நவ.7- பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் திங்கட்கிழமை சோதனை நிறைவு பெற்ற நிலையில், சில இடங்களில் மட்டும் சோதனை நடைபெற்று வரு கிறது. குறிப்பாக திருவண்ணாமலை யில் உள்ள அமைச்சரின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்க ளில் துணை ராணுவத்தின் பாதுகாப்பு டன் சோதனை நடைபெற்றது.