2025-26 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட், “விக்சித் பாரத்” என்ற கனவுடன் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எண்களும் உண்மைகளும் வேறு கதையைச் சொல்கின்றன.
கல்வி & சுகாதாரத்திற்கு கவலை தரும் நிதி ஒதுக்கீடு
கல்விக்கான ஒதுக்கீடு: ரூ. 1,28,650 கோடி (இது மொத்த பட்ஜெட்டில் 2.3 சதகிதம் மட்டுமே) - சுகாதாரத்திற்கு: ரூ. 98,311 கோடி (மொத்த பட்ஜெட்டில் 1.8 சதவிகிதம்) சர்வதேச தரநிலையின்படி, கல்விக்கு ஜிடிபியில் குறைந்தது 6 சதவிகிதமும், சுகாதாரத்திற்கு 5 முதல் 6 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் நிலையோ, இரண்டுக்குமே 3 சதவிகிதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.
ஆயுதங்களா? மக்கள் நலனா?
- பாதுகாப்புத்துறைக்கான செலவு ரூ. 4,91,732 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சமூக நலனுக்கு ரூ. 60,052 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. - கடந்த ஆண்டை விட பாதுகாப்பு செலவு 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பணவீக்கத்தை கணக்கிட்டால் சமூக நலத்திட்டங்களில் உண்மை வளர்ச்சி மைனஸ் 2 சதவிகிதமாக உள்ளது.
வேலைவாய்ப்பு: வாக்குறுதிகளும் யதார்த்தமும்
நாட்டில் ஓராண்டிற்கான வேலைத் தேவை 1 கோடியே 20 லட்சம். ஆனால், அறிவிக்கப்பட்ட புதிய வேலைகள் என்று பார்த்தால், 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. பொதுத்துறை வேலைகள் குறைக்கப்பட்டு உள்ளன. சொத்து பணமாக்கல் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புக்கள் பறிக்கப்பட்டுள்ளன.
விவசாயம்: யாருக்கான ஆதரவு?
வேளாண் துறைக்கான மொத்த ஒதுக்கீடு: ரூ. 1,71,437 கோடியாகும். விவசாயிகள் எண்ணிக்கை 14 கோடி என்ற நிலையில், தலா ஒரு விவசாயிக்கு ரூ. 1,224 மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், கார்ப்பரேட் துறைக்கான வரிச்சலுகைகள் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு
- நாட்டின் மொத்த செல்வத்தில் 40.5 சதவிகிதம் வெறும் 1 சதவிகிதமாக பெரும் பணக்காரர்களிடமும், 50 சதவிகிதமாக உள்ள ஏழைகளிடம் வெறும் 3 சதவிகிதமும் மட்டுமே சொத்துக்கள் உள்ளன. ஆனால், வருமான வரி செலுத்துவோர் 1.5 கோடி மட்டுமே என்பதைப் பார்த்தால், ஜிஎஸ்டி மூலம் ஏழைகள் மீதான சுமை தான் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
நிதிப் பற்றாக்குறை & கடன் சுமை
பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் (GDP) 4.4 சதவிகிதமாக உள்ளது. கடன் சுமை, கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மொத்த வருவாயில் 20 சதவிகிதம் கடனுக்கான வட்டியாக மட்டும் செலுத்தப்படுகிறது.
வங்கி & நிதித்துறை
ரூ. 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி அளவிற்கான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு கடன்கள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் வசூலிக்கப்பட்டு விடும் நிலையில், பெரும்பாலும் பெருநிறுவனங்களின் கடன்களே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எண்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த பட்ஜெட் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் வாய்ப்பே அதிகம். மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான உண்மையான முதலீடுகள் குறைவாகவே உள்ளன. பெருநிறுவனங்களுக்கான சலுகைகளே அதிகம்.
புள்ளிவிவர பகுப்பாய்வு எண்களின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்
பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் செயல்திறன் (2020-2025): முக்கியத் துறைகளில் லாபம்:
பொதுத்துறை பெல் (BHEL): ரூ. 22,000 கோடி செயில் (SAIL): ரூ. 18,500 கோடி என்டிபிசி (NTPC): ரூ. 15,000 கோடி ஐஓசி (IOC): ரூ. 25,000 கோடி தனியார் துறை ஐடி (IT) துறை: ரூ. 85,000 கோடி தொலைத்தொடர்பு: ரூ. 45,000 கோடி சில்லரை வர்த்தகம்: ரூ. 38,000 கோடி வாகனத் துறை: ரூ. 42,000 கோடி இந்த எண்கள் காட்டுவது என்னவென்றால், பொதுத்துறை நிறுவனங்கள் மூலதன போதாமை, தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான நிதி இல்லாமை போன்ற காரணங்களால் பின்தங்கியுள்ளன. ஆனால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் மூலோபாய துறைகளில் பொதுத்துறையின் பங்கு இன்றியமையாதது.
வேலைவாய்ப்பு உருவாக்கம் (2020-25):
துறை வாரியாக வேலை உருவாக்கம்: பொதுத்துறை: 8.5 லட்சம் தனியார் துறை: 12.2 லட்சம் முறைசாரா துறை: 45.8 லட்சம் சுய தொழில்: 25.5 லட்சம் -ஆனால், ஓர் ஆண்டுக்கு தேவையான வேலை 1.20 கோடி. இந்த இடைவெளியை நிரப்ப, பொதுத்துறையின் பங்களிப்பு அவசியம். ஆனால் தற்போதைய தனியார் மயமாக்கல் கொள்கை இதற்கு நேர்மாறாக செயல்படு கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் நிலை: ஊதிய விகிதம் (2020-25):
பணவீக்க விகிதம் 6.5 சதவிகிதமாக உள்ள நிலையில், ஊதிய உயர்வோ 4.2 சதவிகிதமாகவே உள்ளது. உண்மையான வருமான இழப்பு 2.3 சதவிகிதமாக உள்ளது- வேலை பாதுகாப்பும் மோசமாக உள்ளது. நிரந்தர வேலையில் இருப்போர் வெறும் 8 சதவிகிதம் பேர் மட்டுமே ஆவர். ஒப்பந்த வேலையில் 27 சதவிகிதம் பேரும், தற்காலிக வேலைகளில் தான் அதிகபட்சமாக 65 சதவிகிதம் பேரும் உள்ளனர்
சமூக பிரிவுகளின் நிலை
கல்வி அணுகல்:
மேல்தட்டு மக்களில் 92 சதவிகிதம் பேரும், நடுத்தர மக்களில் 68 சதவிகிதம் பேரும், ஏழைகளில் 42 சதவிகிதம் பேருமே கல்வி வாய்ப்பை பெறக்கூடியவர்களாக உள்னர்.
சுகாதார அணுகல்:
நாட்டின் 15 சதவிகித மக்கள் தனியார் மூலமாக மருத்துவ வசதியை பெறும் நிலையில், 45 சதவிகிதம் பேர் அரசு மருத்துவமனைகளையே சார்ந்து உள்ளனர். இந்த இரண்டு மருத்துவ வசதிகளும் கிடைக்காதவர்களாக 40 சதவிகித மக்கள் உள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவது என்னவென்றால், பொருளாதார கொள்கைகள் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் இல்லை என்பதே. எனவே, அடிப்படை மாற்றங்கள் தேவை.
பணவீக்கம் மற்றும் வாங்கும் சக்தி
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு
உணவுப் பொருட்கள்: 12.5 சதவிகிதமும், மருந்துகள்: 15.8
சதவிகிதமும், போக்குவரத்து: 18.2 சதவிகிதமும், கல்வி: 22.4 சதவிகிதம் விலைவாசி உயர்வைக் கண்டுள்ளன.
ஆனால், ஊதிய உயர்வு: 4.2 சதவிகிதம் என்ற அளவிலேயே உயர்ந்துள்ளது. வாங்கும் சக்தி இழப்பு: 8.3 சதவிகிதமாக உள்ளது.
தேவையான மாற்று பொருளாதார மாதிரி
உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலானது
. சமூக நலன் சார்ந்தது
. சுயசார்பு பொருளா
. தாரத்தை நோக்கியது
. சமத்துவத்தை உறுதிப்
. படுத்துவது
செயல்படுத்த வேண்டியவை
. பொதுத்துறை வலுப்படுத்தல்
. கூட்டுறவு இயக்கம் விரிவாக்கம்
.உள்ளூர் பொருளாதாரம் மேம்பாடு
. சமூக பாதுகாப்பு வலையம் விரிவாக்கம்
இந்த பட்ஜெட் காட்டும் பொருளாதார மாதிரி
வெளிநாட்டு மூலதனத்தை சார்ந்தது; உள்நாட்டு உற்பத்தியை புறக்கணிப்பது; சமூக நலனை மறப்பது; சமத்துவமின்மையை அதிகரிப்பது என்பதாகவே 2025-26 பட்ஜெட் உள்ளது.
சமூக பாதுகாப்பு வளையத்தின் பலவீனம்
சமூக பாதுகாப்பு திட்டங்கள் (2024-25):
. ஓய்வூதியம் பெறுவோர்: 12 சதவிகிதம்
. காப்பீடு உள்ளோர்: 15 சதவிகிதம்
. மருத்துவ பாதுகாப்பு: 18 சதவிகிதம்
. வேலை உத்தரவாதம்: 8 சதவிகிதம்
மாநிலங்களின் நிதிநிலை
ஒன்றிய - மாநில உறவுகளின் முரண்பாடுகள் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு (2025-26): ஒன்றிய அரசுக்கான மொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு: 22 சதவிகிதம். நிதி ஆணையம் 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதில் இன்னும் 20 சதவிகித இடைவெளி தொடர்கிறது. இதனால் மாநிலங்கள் கடன் சுமையில் தவிக்கின்றன. தமிழ்நாடு: 7.8 லட்சம் கோடி ரூபாய், கேரளம்: 6.5 லட்சம் கோடி ரூபாய், பஞ்சாப்: 5.2 லட்சம் கோடி ரூபாய், பீகார்: 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான கடனில் தள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தியின் சரிவு
உள்நாட்டு சிறு தொழில்கள் நிலை: மூடப்பட்டவை (2024-25): 2.8 லட்சம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்: 12.5 லட்சம் திரும்ப பெற முடியாத கடன்: ரூ. 85,000 கோடி
பொதுத்துறை முதலீடுகள் குறைப்பு
துறைவாரியான பொதுத்துறை முதலீடுகள் 2020-21:
. உற்பத்தித்துறையில் 85,000 கோடி ரூபாய்.
. உள்கட்டமைப்பு: 1,25,000 கோடி ரூபாய்
. சேவைகள்: 45,000 கோடி ரூபாய்
. 2025-26 (குறைப்பு):
. உற்பத்தி: 45,000 கோடி ரூபாய்
. உள்கட்டமைப்பு: 82,000 கோடி ரூபாய்
. சேவைகள்: 28,000 கோடி ரூபாய்
சமூக நலத் துறைகளில் செலவினம் (ஜிடிபி-யில்)-சர்வதேச ஒப்பீடு
கல்வி
. நார்வே: 7.9 சதவிகிதம்
. ஜப்பான்: 6.8 சதவிகிதம்
. பிரேசில்: 6.1 சதவிகிதம்
. இந்தியா: 2.3 சதவிகிதம்
சுகாதாரம்
. ஜெர்மனி: 8.2 சதவிகிதம்
. பிரிட்டன்: 7.5 சதவிகிதம்
. சீனா: 5.4 சதவிகிதம்
. இந்தியா: 1.8 சதவிகிதம்
. இந்த ஒப்பீடு காட்டுவது, இந்தியாவின் சமூக நலச் செலவினம் மிகவும் குறைவு என்பதே.
வர்க்க ரீதியான பொருளாதார பாதிப்புகள்
அடித்தள மக்களின் நிலை வருமான பகிர்வு (2024-25):
மேல்தட்டு 1 சதவிகித மக்களிடம் மொத்த செல்வத்தில் 40.5 சதவிகிதம் உள்ளன. அடுத்துள்ள 9 சதவிகிதம் பேரிடம் 35.8 சதவிகிதம் செல்வம் உள்ளது. மத்திய தரமாக உள்ள 40 சதவிகிதம் பேரிடம் 20.6 சதவிகிதம் சொத்துக்களும், ஏழைகளாக இருக்கும் 50 சதவிகிதம் பேரிடம் மொத்தமே 3.1 சதவிகிதமும் சொத்துக்கள் உள்ளன. இந்த எண்கள் காட்டுவது, செல்வக் குவிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையும், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் நெருக்கடியில் உள்ளதையே ஆகும்.
பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஆதிக்கம்
அந்நிய முதலீடுகள் (2024-25):
FDI: $82.5 பில்லியன்
FPI: $45.2 பில்லியன்
முக்கிய துறைகள்
டிஜிட்டல் பேமெண்ட்: 85 சதவிகிதம்
சில்லறை வர்த்தகம்: 62 சதவிகிதம்
உற்பத்தி: 45 சதவிகிதம்
வங்கி/நிதி: 38 சதவிகிதம்
பொருளாதார வளர்ச்சியின் பங்கீடு: துறை வாரியான வளர்ச்சி
நிதித்துறை: 18.5 சதவிகிதம், IT/ITES: 15.2 சதவிகிதம், உற்பத்தி: 8.4 சதவிகிதம், விவசாயம்: 2.1 சதவிகிதம். ஆனால் வேலைவாய்ப்பு என்று பார்த்தால், விவசாயத் துறையில் 42 சதவிகிதம் பேரும், உற்பத்தித்துறையில் 25 சத விகிதம் பேரும், சேவைத்துறையில் 33 சதவிகிதம் பேரும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வேறுபாடுகள் காட்டுவது, வளர்ச்சியின் பலன்கள் சமமாக பகிரப்படவில்லை என்பதையே ஆகும்.
மனிதவள மேம்பாட்டின் நிலை
பயிற்சி பெற்றோர்: 15 சதவிகிதம்,
வேலை கிடைத்தோர்: 8 சதவிகிதம்,
செலவிடப்பட்ட நிதி: ரூ.12,500 கோடி,
வீணான நிதி: 45 சதவிகிதம்
வேலையின்மை நெருக்கடி
வேலையின்மை விகிதம்
18 முதல் 25 வயது வரையிலான 28.5 சதவிகிதம் பேரும், 26 முதல் 35 வயது வரையிலானவர்கள் 18.2 சதவிகிதம் பேரும், 36 முதல் 45 வயது வரையிலானவர்கள் 12.4 சதவிகிதம் பேரும், 46 முதல் 60 வயது வரையிலானவர்கள் 8.5 சதவிகிதம் வேலையின்றி உள்ளனர். கல்வித்தகுதி வாரியாக பார்த்தால், பட்டதாரிகளில் 32 சதவிகிதம் பேரும், தொழிற்கல்வி பெற்றவர்கள் 24 சதவிகிதம் பேரும், பள்ளிக்கல்வி பெற்றவர்கள் 15 சதவிகிதம் பேரும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.