“ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் கூட்டாளி தமிழ்நாடு ஆளுநர்”
ஆன் லைன் ரம்மி தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய, மாநில ஆளுநரின் நடவடிக்கை அராஜகமானது. ஜனநாயக பூர்வமற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலையில் வியாழனன்று (மார்ச் 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மி காரணமாக பணத்தை இழந்து இதுவரை 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல ஆயிரம் குடும்பங்கள் சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறது. தமிழ்நாடு அரசு ஆன் லைன் ரம்மி தடையை, சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், அதற்கு விளக்கம் கேட்கிறார். உரிய விளக்கம் அளித்தாலும், அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் ஆளுநர் விளக்கம் கேட்கிறார். மொத்தத்தில், தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆன் லைன் ரம்மி சூதாட்ட நிறுவனத்தின் கூட்டாளியாக இருக்கிறார் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.
மோடி அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்
திருவண்ணாமலை, மார்ச். 9- திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள இனாம்காரி யந்தல் கிராமம் அருகே அமைக்கப் பட்டுள்ள, மக்கள் விரோத, சுங்கச்சா வடியை அகற்ற வலியுறுத்தி, வேலூர் சாலை தீபம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வியாழனன்று (மார்ச் 9) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார் தலைமை யில் நடைபெற்ற இந்தப்போராட்ட த்தில் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பங்கேற்றுப் பேசிய தாவது: நெடுஞ்சாலைகளில் தனியார் கட்டணம் வசூலிப்பது என்பது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் துவக்க ப்பட்டது. சாமானிய மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசு அமைத்துள்ள சாலையில், தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலிக்க மோடி அரசு துணை போகிறது. சாலை, ரயில், விமானம் ஆகியவற்றைத் தனியாரிடம் விற்கும் செயலில் ஈடுபட்டுள்ள மோடி அரசு, சாமானிய மக்களுக்காக ஆட்சி செய்யாமல், அம்பானி, அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்காக ஆட்சி செய்கிறது.
திருவண்ணாமலை வேலூர் சாலையில் பகல் கொள்ளை போல் கட்டண வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வேலூர் சாலை இரு வழிச் சாலை யாகத் தான் உள்ளது. அதை நான்கு வழிச் சாலையாக மாற்றம் கூடச் செய்யாமல், இரு வழி சாலை யில் வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை திரு விழா காலங்களில் வரும் மக்களி டம், பணம் கொள்ளையடிக்கப்படு கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பணம் வசூல் செய்து வரு கிறார். தமிழகத்தில் 32 இடங்களில் வசூல் மையம் அமைக்கப்பட்டுள் ளது சட்டவிரோதமானது என, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தில்லியில் சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து சுங்கச்சாவடிகளை அகற்ற மனு அளித்துள்ளார். திருவண்ணா மலையில் அமைக்கப்பட்டுள்ள வசூல் மையம் அடுத்த வசூல் மையத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும், ஆனால், 57 கிலோமீட்டர் தூரத்தி லேயே வசூல் மையம் உள்ளது. நகர எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை மீறி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த சுங்கச்சாவடியை அகற்று வது குறித்து, மத்திய அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் கூறியுள்ளார். சுங்கச்சாவடி அலுவலக கட்டிடம் நீர்நிலைப் பகுதியில் அமைக்கப்பட்டு இருப்பதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு குறித்து, உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப் படும், உள்ளூர் மக்களின் வாகனங் களுக்குக் கட்டண விலக்கு அளிப்பது குறித்து இன்று மாலை நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்த நமது கோரிக்கை ஏற்கப் படாத பட்சத்தில், அடுத்த கட்டமாக, முன்னறிவிப்பின்றி தினம், தினம் தொடர் போராட்ட ம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எம். பிரகலாதன், பா. செல்வன், இரா. பாரி, கே. வாசுகி, எஸ். ராமதாஸ், ஏ. லட்சுமணன் மற் றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.