states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. கேரள மாநிலம் பாலக் காடு முதலாமடா பகுதி யில் உள்ள ஒரு தனியார் பன்றிப் பண்ணையில் தொடர்ச்சியாக பன்றிகள் உயிரிழந்த நிலையில், பன்றிகளுக்கு பரி சோதனை மேற்கொள் ளப்பட்டது. பரிசோதனை முடிவில் பன்றிகளுக்கு “ஆப்பிரிக்க பன்றிக்கா ய்ச்சல்” நோய் ஏற்பட்டிரு ப்பது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பன்றிப் பண்ணையை சுற்றி யுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதி தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகு திகளில் பண்ணைகளில் பன்றிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள் ளது பாலக்காடு மாவட்ட நிர்வாகம். 
  2. தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் உட்பட மூன்று நில உரிமையாளர்கள் 2 வாரத்திற்குள் தேனி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
  3. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காமல் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித் துள்ள நிலையில், நீதி மன்றத்தின் கருத்துப்படி சிறுபான்மை பள்ளி களில் 1,156 பேரும்,  சிறுபான்மை அல்லா தோர் பள்ளிகளில் 591 பேரும் பணிபுரிந்து வரும் 1,747 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  4. அருணாச்சல பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் இந்திய ராணு வத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
  5. உலகின் முதல்நிலை பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறு வனத்தை வாங்கிய பின்னர் அந்நிறுவனத் தில் பணிபுரியும் 75 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் 7,500 ஊழியர்கள் உள் ளனர் என்பது  குறிப்பிடத் தக்கது.
  • மியான்மரில் காணாமல் போன உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் இறந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தவே இத்தகைய கொலை பாதகச் செயல்களில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இவரது மரணம் குறித்து அரசோ அல்லது அரசு ஊடகங்களிலோ எந்தவித செய்தியும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்தக் கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சிகளும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • தெற்கு மடகாஸ்கரில் சுத்தமான நீரைத்தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அனோசி என்ற பகுதியில் பல மணிநேரங்கள் நடந்து போய் தங்கள் பாத்திரங்களை நிரப்பி வருகிறார்கள். எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் மன்றாரே ஆறு மிக மோசமாக இருக்கிறது. கழிவு நீர் அதில் பெருமளவில் கலந்து வருவதால் குடிப்பதற்கான நிலையில் இது இருப்பதில்லை. 
  • பசிபிக் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்காக 56 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலர்களை ஆஸ்திரேலியா ஒதுக்கியுள்ளது. பசிபிக் பகுதிகளில் ஏராளமான தீவு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு உதவுவதாக ஆஸ்திரேலியா ஏற்கனவே உறுதியளித்திருந்தது. தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கீட்டை செய்வோம் என்று தற்போது அறிவித்துள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் கூறியுள்ளார்.