சென்னை, ஜூன் 18- பாளையங்கோட்டை சிறையில் - பட்டிய லின வகுப்பைச் சார்ந்த தென்காசி இளைஞர் இறந்த சம்பவம் குறித்து உயர்மட்ட நீதி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தென்காசி மாவட்டம் புளியங்குடி வட்டம், நடு கருப்பழகத் தெருவைச் சேர்ந்தவரும், பட்டியலின வகுப்பைச் சார்ந்தவருமான மாட சாமி என்பவரின் மகன் தங்கசாமி (வயது 26). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரை புளியங்குடி காவல்துறை யினர் ஜூன் 11 ஆம் தேதியன்று கைது செய்து பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். அவர் சிறையில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தங்கசாமி மீது இதற்கு முன்பு எவ்வித வழக்கும் இல்லாத நிலையில் அவரை விசா ரணை என்று போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்துள்ளதும், மேலும் அவரை கைது செய்த விவரமோ, சிறையிலடைத்த விவரமோ குடும்பத்தாருக்கு தெரிவிக்கா ததும், அவர் சிறையில் இறந்த பிறகு தான் அவர் கைது செய்யப்பட்ட விபரமே தங்கசாமி யின் அம்மாவிற்கும், தம்பிக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 15.06.2023 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறைக்கு வந்து பார்த்தபோது தங்க சாமியின் உடம்பில் காயங்கள் காணப்பட்டுள் ளன. அதை உறவினர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அப்படி வீடியோ எடுத்தவர்களின் செல்போனைப் பறித்து, மிரட்டி காவல்துறை உதவி ஆணை யர் சதீஸ்குமார் அழித்துள்ளார்.
இவ்வா றான மரணங்கள் குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் முந்தைய உத்த ரவுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை என தெரிகிறது. தங்கசாமியின் குடும்பத்தினருக்கு மருத்துவமனையில் உடற்கூராய்வு அறிக்கை மட்டும்தான் 16.06.2023 அன்று தரப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தரப்பட வில்லை. அதை ஏற்கனவே நீதித்துறை நடு வர் எண் 1 அவர்கள் சார்பாக போலீசார் வாங்கிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கிறார் கள். ஆனால் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் கேட்டபோது அங்கு வீடியோ வந்து சேரவில்லை என்கிறார்கள். இதுவும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தங்கசாமியின் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்திட வேண்டுமென வலி யுறுத்தி பெற்றோரும் உறவினர்களும் அவ ரது உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த மரணம் குறித்து பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், குற்றமிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், உயிரிழந்த தங்கசாமியின் குடும் பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.