states

img

மொத்தக் கனவுக்கும் உயிர் கொடுத்தவர்கள் எம் தோழர்களே! - சு.வெங்கடேசன் எம்.பி.,

மாற்றுத் திறனாளிகளுக் கான உபகரணங்கள் வழங்கும் முகாம் முதல் கட்டமாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து  முடிந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 15 மையங்க ளில் நடந்த அளவீட்டு முகாம்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கெ டுத்தனர். பல்வேறு நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைந்தன. அதில் ஒன்றிய அரசின் ‘அலிம்கோ’  நிறுவனம் சார்பில் 2,477 பேருக்கு செயற்கை உபகரணங்களும் கருவி களும் வழங்கப்பட்டுள்ளன.  இப்பெரும் பணி எளிதில் நடந்துவிட வில்லை. 2019 நவம்பர் 4-ஆம் தேதி அன்றைய  ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி னேன். அன்றைக்குத் தொடங்கி  2023 மே 18-ஆம் தேதி முகாம் நடைபெற்றது வரை ஒன்றிய அமைச்சர், துறை செய லாளர், அலிம்கோ நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எங்களது அலுவலகத்தில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை சுமார் நூறு இருக்கும். இதன் தொடர்ச்சியாக இந்த அலு வலகங்களுக்கெல்லாம் எத்தனையோ முறை தொடர்புகொண்டிருப்பேன். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முறை மதிப்பீட்டு முகாம்களுக்கு  தேதி அறிவிக்கப்பட்டது.

மதுரை மாவட் டத்திலிருந்த அன்றைய அமைச்சர்கள் இருவரும் தலா ஒரு முறை முகாமை ஒத்திவைத்து மாற்றுத்திறனாளிகள் மீதான தங்களின் அன்பை வெளிப் படுத்தினர்.  மூன்றாம் முறை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப் பட்டது. அந்த காலத்தில் ஆட்சியர் ஒரு வர் இருந்தார். இந்த முகாம் நடந்தால்  எதிர்க்கட்சி எம்.பி.க்கு பெயர் கிடைக்  கும்; அதனால் தனது எஜமானர்களுக்கு  தன் மீது வருத்தம் வந்துவிடும் என்ப தால் எவ்வளவு உதாசீனப்படுத்த முடி யுமோ அவ்வளவு உதாசீனப்படுத்தினார்.  அவரைப் பொதுவெளியில் அம்ப லப்படுத்தியிருக்க முடியும். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்காகச் செய்யப்படும் இப்பெரிய பணி தடை பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு அவமானங்களை சகித்துக்கொண்டோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் அறைக்குள் நுழைந்தால், எழுந்து நின்று வரவேற்க வேண்டும்  என்பதில் தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி நடத்தப்பட வேண் டும் என 20-க்கும் மேற்பட்ட விதிகள் உண்டு. 

அதனை மீறுகிறவர்களை நாடாளு மன்றத்தின் உரிமைக்குழுவின் முன்  னால் நிறுத்த முடியும். அவரை அப்படி நிறுத்தியிருக்க முடியும். அதிகாரத் துக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு அதிகாரத்தின் தொங்குசதை யோடு போராடி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இப்படியாக இந்த முகாமை நடத்தி  முடிக்க எத்தனையோ தடைகளைத் தாண்டியுள்ளோம். அவற்றை எல்லாம் எழுதினால் பல பக்கங்கள் நீளும். சுருக்கமாகச் சொல்  வது ஒன்று தான். அரசாங்கத்தில் திட்டம்  இருந்தாலும் அதனைப் பயன்படுத்தும் சட்ட வாய்ப்பு இருந்தாலும் எந்த ஒரு  நல்ல செயலையும் அவ்வளவு எளிதில்  யாராலும் செய்துவிட முடியாது. நன் மையைச் செய்வதற்கு இணையான சவால் இந்த உலகில் வேறில்லை. ஆனால், அதே நேரம், நன்மையைச் செய்ய முனையும் யாரும் தனித்து விடப்படுவதில்லை. அவர்களின் அவ மானங்களைத் துடைக்க ஆயிரம் கை கள் நீண்டு வரும். அவர்களின் முயற்சி யை தனக்கான முயற்சியாக ஏந்திக்  கொள்ள எத்தனையோ பேர் முன்வருவர். இந்த முகாமின் துவக்கவிழாவில் பேசிய  ஒன்றிய இணை அமைச்சர் அ. நாராயணசாமி அவர்கள் ‘‘2,477 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்படு வதென்பது அசாதாரணமான ஒன்று. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இவ்வளவு சிறப்பாக இம்முகாம் நடை பெறுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் உங்களது தொகுதியின் நாடா ளுமன்ற உறுப்பினர். அவர் தொடர்ந்து எடுத்த முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது’’ என்று குறிப்பிட்டார். உண்மையைச் சொல்வதென்றால் இப்பெரும் பணியில் கடைநிலைப் பங்களிப்புதான் என்னுடையது.  

எமது இயக்கதோழர்களே இந்த  மொத்தக் கனவுக்கும் உயிர் கொடுத்த வர்கள். மதுரை மாவட்டம் முழுவதும் 17760 மாற்றுத்திறனாளிகளைப் பங்கெ டுக்க வைத்து சரித்திரச் சாதனை படைத்  தவர்கள் எம் தோழர்கள். பிரதமரின்  வாரணாசி தொகுதியில் 21000 மாற்  றுத்திறனாளிகள் பங்கெடுத்துள்ளார் கள். அதுவே இதுவரை இந்தியாவில் நடைபெற்ற முகாம்களில் சாதனை எண்ணிக்கை.  அதனைத் தாண்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்றினோம். தாண்ட முடியாத வருத்தமில்லை. தொட்டுவிட்ட மகிழ்வே இருக்கிறது.  இந்தப் பெரும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறேன். அலிம்கோ நிறுவனம், தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்  துறை, மாற்றுத்திறனாளிகள் நலச்சங் கம், வாலிபர் சங்க, மாணவர்கள் சங்கத்  தோழர்கள், ரோட்டரி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். எம்.பி., அலுவலகத் தோழர்கள் அனை வருக்கும் எமது நன்றி. மக்களுக்கான எங்களின் பணிக்கு  மேலும் உத்வேகம் கொடுக்கும் செய லொன்றினை நிறைவேற்றியுள்ளோம். நிகழ்ச்சியன்று நண்பர் ஒருவர் கேட்டார் ‘‘இரண்டு கோடி ரூபாய்க்கான  உதவிகளை ஒரு தொகுதியில் மட்டும் எப்படி பெற்றுத்தர முடிந்தது?’’ நாங்கள் உதவி பெற்றுத்தந்தவர்கள் அல்ல, மாற்றுத்திறனாளிகள் தங்க ளின் உரிமையைப் பெற உடன் நின்ற வர்கள். எளிய பொருளாதார அளவீடு களுக்குள் அடங்காதது மனிதநேயமும், தோழமையும். ‘மாற்றும் மதுரை’!