சென்னை, பிப்.12- தவறான சிகிச்சையால் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப் பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் புளோரா. இலங்கை தமிழரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள ஜி.ஜி. மருத்து வமனை (நடிகர் ஜெமினி கணேசன் மகள் கமலாவுக்கு சொந்தமான மருத்து வமனை) கருத்தரிப்பு சிகிச்சையில் நிபு ணத்துவம் பெற்றது என்று கூறப்பட்ட தால், அங்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் கட்டி உள்ளதாக கூறி அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றனர். அதன்படி எனக்கு 2013-ம் ஆண்டு மே 15-ந் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் எனக்கு மூச்சுத்திணறல், வாந்தி, தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டன. அங்கி ருந்த செவிலியர் மூலம் டாக்டர்கள் செல்வராஜ், கமலா செல்வராஜ் ஆகி யோர், இவையெல்லாம் சிகிச்சைக்கு பின்னர் வழக்கமாக ஏற்படும் நிகழ்வு கள்தான் என்று கூறிவிட்டனர். என்னால் வலியைத் தாங்கமுடியாமல் துடித்த போது, என்னைப் பரிசோதித்த டாக்டர் கள் எந்த ஒரு ஒப்புதலையும் பெறாமல் 2-வது அறுவைசிகிச்சையை மேற் கொண்டனர்.
பின்னர், என்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இடம்மாற்றினர். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டர் கள், அறுவைசிகிச்சையில் தவறு நடந்து ள்ளதாகவும், பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். அதன் பின்னர் 3-வது அறுவைசிகிச்சை செய்ய ப்பட்டது. அப்போது என் சகோதரரிடம் ஜி.ஜி. மருத்துவமனை நிர்வாகத்தினர் ரூ.5 லட்சம் தருவதாகவும், இந்த பிரச்சினையை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சமரசம் பேசினர். அதை நாங்கள் ஏற்கவில்லை. தவ றான அறுவைசிகிச்சையால், சுமார் 37 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து, உயிரைக் காப்பாற்ற போராடி யுள்ளேன். கடுமையான மன உளைச் சலுக்கும் ஆளாகியுள்ளேன். எனவே எனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜி.ஜி. மருத்துவ மனை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சந்திர சேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தவறான அறுவை சிகிச்சையால் மனுதாரரின் பெருங்கு டல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மலத்தை வெளியேற்ற வயிற் றுக்கு மேல் பை ஒன்று நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழி யாகத்தான் மலம் கழிக்க வேண்டும். இதனால் அவரால் பிறருடன் பழக முடியவில்லை. பார்த்துக்்கொண்டி ருந்த வேலையையும் இழந்துள்ளார். பிறர் உதவி இல்லாமல் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் சொல்ல முடியாத அளவுக்கு மனவேதனையில் வாழ்ந்து வருகிறார். எனவே, உரிய இழப் பீட்டை அவருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட றிந்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், ‘தவ றான சிகிச்சையால் மனுதாரர் நிரந்தர மாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ழக்கமான, அன்றாட வாழ்க்கையை வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட் டுள்ளார். எனவே அவருக்கு இழப்பீ டாக ரூ.40 லட்சத்தை 12 சதவீத வட்டி யுடன் ஜி.ஜி. மருத்துவமனை நிர்வா கம் வழங்க வேண்டும்’ என்று உத்தர விட்டார்.