states

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு; தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்

புதுதில்லி, டிச.3- சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சத விகித ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் நட வடிக்கைக்கு நடப்பாண்டும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்த  உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் 16-ஆவது நாளில் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளன என்  பதை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்குமாறு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு களில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட  ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு, 2020-ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது.  இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021-22-ஆம் கல்வியாண்டுக்கு 50 சதவிகித இடங்க ளுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனு மதியளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தி ருந்தது.  இந்த இடைக்கால உத்தரவின் அடிப்படை யில், நடப்பு 2022-23 நிதியாண்டிலும் அரசு மருத்து வர்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கி, தமி ழக அரசே கலந்தாய்வு நடத்தும் என எதிர்பாக் கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசின் பொது சுகா தார பணிகள் தலைமை இயக்குநர், 100 சதவிகித இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு நடத்தும் என்று அறிவிப்பு வெளியிட்டு, சர்ச்சை யை ஏற்படுத்தினார்.

இதை எதிர்த்தும், தமிழக அரசு 2020-ஆம்  ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படை யில் 50 சதவிகித இடங்களை அரசு மருத்து வர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தர விடக் கோரியும் அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரி பிர சாந்த் உள்பட இருவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவிகித இடங்களுக்கு தமிழக அரசு கலந்  தாய்வு நடத்த அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த நவம்பர் 18 அன்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2021-22ஆம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட  ஒதுக்கீட்டை வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி  அளித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு களுக்கு நீட்டிக்கவில்லை எனவும் ஒன்றிய அர சுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், தமிழக அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால், கலந்  தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதி யளித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்  பித்த உத்தரவு அடுத்தடுத்த கல்வியாண்டு களுக்கும் பொருந்தும்; எனவே, கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்; அத்துடன் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என்று தமி ழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறி ஞர் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா? என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசோ, மனு தாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம்  வழங்கி உத்தரவிட்டார். 

அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு களில் 50 சதவிகித இடங்களை விண்ணப்பதா ரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கு மாறும் ஒன்றிய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குநருக்கு நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யிலுள்ள வழக்கு வெள்ளியன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத் அமர்வில் விசார ணைக்கு வந்தது. தமிழக அரசுத் தரப்பில் வழக்க றிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி, அரிஸ்டாட்டில், தமிழக அரசு மருத்துவர்கள் அசோசியேஷன் தரப்பில் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜ ராகினர். இவர்கள் தங்களின் வாதத்தில், ‘‘அரசு  மருத்துவர்களுக்கு (இன் சர்வீஸ்) சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50 சத விகித ஒதுக்கீடு வேறுமாநில மாணவர்களுக்கு செல்கிறது. சுமார் ரூ.400 கோடி வரை தமிழக  அரசு அந்த மாணவர்களுக்கு செலவு செய்கி றது. ஒரு மாணவருக்கு ரூ. 2 கோடி என பிற  மாநில மாணவர்களுக்கு செலவு செய்யப்படு கிறது என தெரிவித்தனர். ஆனால் தமிழக அரசின் வாதத்திற்கு ஒன்றிய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி எதிர்ப்பு தெரி வித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கவாய், ‘‘தமிழக அரசு அவர்களுக்காக பணி புரியும் மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது?” என கேள்வி எழுப்பியதோடு, “தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் அரசு  மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு  வழங்கி இந்த ஆண்டும் சேர்க்கை நடத்தலாம்.  அதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால்  அதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் (டிசம்பர் 2, 2022) இருந்து அடுத்த 15 நாட்களில் முடித்து விட வேண்டும். 16-வது நாள் அன்று மீதம் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளன என்பது உட்பட அனைத்து விவரங்களையும்  அரசு வழக்கறிஞரான அரிஸ்டாட்டில், ஒன் றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தர விட்டனர். மேலும், வழக்கின் இறுதி விசாரணை யை பிப்ரவரி மாதத்திற்கும் அவர்கள் ஒத்தி வைத்தனர்.

 

;