சென்னை, மே 25- தமிழ்நாட்டில் 11 உறுப்புக் கல்லூரி களில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகம் அறி வித்தது. இதற்கு, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து திரும்ப பெற்றுக்கொண்டது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவு கள் தற்காலிகமாக மூடப்படு வதாக அண்ணா பல்கலைக்கழகம் சில நாட்க ளுக்கு முன்பு உத்தரவிட்டது. இதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரி களில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப் பட்டது. மாணவர் சேர்க்கை இல்லாத தன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப் பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்பவும், உயர் கல்வித்துறை அமைச்சரின் அறிவு றுத்தலின்பேரிலும் இந்த உத்தரவு திரும்பப் பெறுவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறும் என்றும் இதனை தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ‘அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி என்றில்லாமல் பொது வாகவே சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் குறைவாகவே சேர்கின்ற னர். மேற்குறிப்பிட்ட 11 கல்லூரிகளில் தமிழ்வழிசிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் 10க்கும் குறைவான மாண வர்களே சேர்கின்றனர். தனியார் கல்லூரிகளிலும் கூட இந்த படிப்பு களுக்கு சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது’ என்றார். இந்நிலையில், இந்த ஆணை திரும்பப் பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.