உத்தரபிரதேசம், அக்.22- உத்தரப்பிரதேச மாநிலம் பிர யாக்ராஜில் ஆரஞ்சு ஜூஸ் குடித்த நோயாளி உயிரிழந்தார். ரத்த பிளாஸ்மாவுக்கு பதில் ஆரஞ்சு ஜூஸை ரத்த வங்கி கொடுத்துள்ளது. மருத்துவர்களும் ரத்த பிளாஸ்மா தான் என முடிவு செய்து நோயா ளிக்கு செலுத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளி உயி ரிழந்தார். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இது குறித்து விசாரணை நடை பெற்றுவருகிறது. பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதி யில் காவல்துறை நடத்திய சோத னையில் போலி ரத்த பிளாஸ்மா வை விற்ற பத்து பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.