states

சொத்துவரி உயர்வை கைவிடுக!

சென்னை,ஏப்.6- சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும் என்று  தோழமைக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.6) கேள்வி நேரத்திற்கு பிறகு, சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க் கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கொடுக்கப் பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்மீது நடந்த விவாதத்தில் கலந்து  கொண்டு பேசிய எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி பழனிசாமி,“கடந்த இரண்டு வருடமாக கடுமையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொத்து வரி  உயர்வு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. வாழ்வாதா ரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இது பெரும் சுமையாக  இருப்பதால் திரும்பப் பெற வேண்டும்” என்றார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் செல்வ பெருந்தகை,“ ஒன்றியத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியில் இருந்தபோது சிலிண்டரின் விலை ரூ.350க்கும் குறைவாக இருந்தது.

டீசல் ஒரு லிட்டர் ரூ.31 க்கு விற்பனை யானது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 502 விழுக்காடு முதல் 883 விழுக்காடு வரைக்கும் உயர்த்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில், தற்போது வரி உயர்த்தப்பட்டிருப் பதற்கான காரணத்தை ஆராயாமல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். நாகை மாலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி,“கொரோனா பெருந்தொற்றில் இருந்து  சமீபத்தில்தான் மக்கள் மீண்டு எழுந்து வந்திருக்கிறார்கள். எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உயர்த்தப் பட்ட சொத்து வரியை கைவிட வேண்டும்” என்றார்.  ஜி.கே.மணி(பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), சதன்திருமலை குமார் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா, ஈஸ்வரன்,ஜெகன்மூர்த்தி ஆகி யோர் பேசினர்.