states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மேற்கு வங்கத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு மாற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில், கோடை விடுமுறைக்குப் பின், மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 5-ஆம் தேதியும், துவக்கப் பள்ளிகள் 7-ஆம் தேதியும் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதத்தின் முதல் பாதி வரை, வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கமிஷனரிலிருந்து கான்ஸ்டபிளானவர் பட்னாவிஸ்தான்

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் (யுபிடி) அனைவரும் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவரும், மகாராஷ்டிர துணைமுதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார். இதற்கு சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார். அதில், “ஒருவர் முதல்வராகப் போகும் நிலையில், திடீரென பதவிப் பிரமாணம் நிறுத்தப்பட்டு, அரசியலில் தன்னை காட்டிலும் ஜூனியருக்கு துணை (துணை முதல்வர்) ஆக்கப்படுகிறார் என்றால், அத்தகைய மனிதனால் (தேவேந்திர பட்னாவிஸினால்) திருப்திப்பட்டு இருக்க முடியுமா? கமிஷனர் பதவியில் இருந்து கான்ஸ்டபிளாக தரமிறக்கப்பட்ட ஒருவர், மற்றவர்களின் திருப்தியை பற்றி என்ன சொல்ல முடியும்? அவர் முகத்தை பாருங்கள் அவரே சோகமாகத்தான் இருக்கிறார்” என்று சஞ்சய் ராவத் கிண்டலடித்துள்ளார்.

ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம்: கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதன் மூலம், 100 யூனிட் அளவிற்குள் பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் குடும்பத்தினர், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை நிராகரித்த பஞ்சாப் முதல்வர்!

காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிங் உள்ளிட்டோரை, பஞ்சாப் காவல்துறை அண்மையில் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். அமெரிக்காவில் உள்ள பகவந்த் மானின் மகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில், பகவந்த் மானுக்கு ஒன்றிய அரசு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க முன்வந்தது. ஆனால், தனக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பகவந்த் மான் கடிதம் அனுப்பியுள்ளார்.

குற்றங்கள் குறைந்துள்ளதாம் : ஆதித்யநாத் அளப்பு

உத்தரப் பிரதேசத்தில், ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சுமார் 10,713 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு, அதில் 178 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அண்மையில் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், “இந்த என்கவுண்ட்டர் காரணமாகத்தான் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் குறைந்திருக்கிறது. அதேபோல சமூக விரோதிகளிடமிருந்து சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மாபியாக்கள் உயிருக்குப் பயந்து காவல்துறையினரிடம் சரணடைந்து வருகின்றனர்” என்று முதல்வர் ஆதித்யநாத் உறுத்தலே இல்லாமல் பேசியுள்ளார்.

கெஜ்ரிவாலை ஆதரிக்க மாட்டேன்: ஒவைசி அறிவிப்பு

“ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தீவிர இந்துத்துவாவை பின்பற்றுகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் போது கெஜ்ரிவால் ஏன் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தார். தற்போது ஏன் கதறுகிறார்? நான் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்கப்போவது இல்லை. ஏனெனில் அவர் இந்துத்துவாவை மென்மையாக ஆதரிக்கிறார் என்றல்ல... மிகத் தீவிரமாக அவர் இந்துத்துவாவை ஆதரிக்கிறார் என்பதற்காக..” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

அகமது நகர், அஹில்யா நகர் என மாற்றம்

மகாராஷ்டிரா மாநிலத்தில், இஸ்லாமிய அடையாளத்திலுள்ள அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை, இந்து அடையாளத்திற்கு மாற்றிய அம்மாநில பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசு, தற்போது அகமது நகர் என்றிருந்த மாவட்டத்தின் பெயரையும் மாற்றியுள்ளது. 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அகமது நிஜாம் ஷா நினைவாக அகமதுநகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில், அதற்குத் தற்போது, 18-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த அஹில்யாதேவி ஹோல்கரின் பெயரைச் சூட்டியுள்ளது.

துணைவேந்தருக்கு எதிரான மனு தள்ளுபடி

கல்வியில் இந்துத்துவா விஷத்தை புகுத்துவதில் தீவிரமாக இருப்பவர், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் ஆவார். இந்நிலையில், யோகேஷ் சிங் விதிமுறைகளை மீறி துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு தேவையான அனுபவம் இல்லை என்றும், இந்திய சட்டவாதிகளின் மன்றம் (போரம் ஆப் இந்தியன் லெஜிஸ்ட்ஸ்) தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் குமாா் சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமர்வு, இந்த மனு பொறுப்பற்ற வகையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி, மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். அபராதமும் விதித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கெஜ்ரிவால் சந்திப்பு

சென்னை, ஜூன் 1- மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு  கொண்டுவந்துள்ள சட்ட மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆளாத மாநில முதல்வர்களை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். கடந்த 9 நாட்களாக தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர்,  ஜப்பான் நாடுகளுக்குசென்று திரும் பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை வியாழனன்று (ஜூன் 1)   தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் பஞ்சாப் முதலமைச் சரும் தன்னை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித் திருந்தார். அதன்படி சென்னை வந்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

பயோமெட்ரிக் முறையில்  நெல் கொள்முதல்

சென்னை,ஜூன் 1- தமிழ்நாடு முழுவதுமுள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் ஜூன் 1  முதல் பயோமெட்ரிக் முறை யில் மட்டுமே கொள்முதல் செய்யப் படும் என்றும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும், பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பலன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது. நெல்லை கொடுக்கும் விவசாயி களிடம் மூட்டைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்வோர் மீதும்  நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தொல்லை: மருத்துவ மாணவர் இடை நீக்கம்

செங்கல்பட்டு, ஜூன் 1- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமiயில் பச்சிளம் குழந்தை பிரிவில் இளங்கலை மருத்து வம் மாணவியிடம் மூத்த மருத்துவர் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர் ஜிதேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அந்த  மாணவி கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீயி டம் புகார் அளித்தார்.  இந்த சம்பவம் குறித்து தகவல்  அறிந்த சக மாணவர்கள், பாதிக்கப்பட்ட  மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தில்  ஈடுபட்டனர். பிறகு, மருத்துமனை துணை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசா ரணை குழு நடத்திய விசாரணையை தொடர்ந்து, அந்த மாணவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டார். 

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஜூன் 1- தங்கம் விலை கடந்த சில நாட்க ளாகவே ஏற்ற இறக்கமாக காணப்படு கிறது. வியாழனன்று (ஜூன் 1) சவரன்  ரூ.200 குறைந்து ரூ.44,960க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.25  குறைந்து ரூ.5,620-க்கு விற்கப்படு கிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 77,600-க்கு விற்பனையானது.