states

ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி வசூல்!

சென்னை, மே 22- கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக பெற வேண்டும் என ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில், கிராம ஊராட்சிகளுக்கு பொது மக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக https://onlineppa.tn.gov.in/ என்ற முகவரி உரு வாக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முழுமை யான செயல்பாடுகள் மே 22 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதற்காக , கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனு மதியும் இணையதளம் மூலமாக வழங் கப்படும் என்றும், ஊரக பகுதிகளில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.