states

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மேலும் ஒரு வழக்கு பதிவு

சென்னை, அக். 20- திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில்  அக்டோபர் 11 ஆம் தேதி சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து, சென்னை ரயில்வே கோட்ட தலைமை  அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி  தலைமையில் புதன்கிழமையன்று 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணை யில் தெரியவந்தது. இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில், இந்திய ரயில்வே சட்டப்பிரிவு - 150ன் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.