states

அவசர கதியில் செறிவூட்டிய அரிசியை வழங்காதீர்!

நீர்நிலைகளை தனியாரிடம் தாரைவார்க்கும்  புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப்பெறுக!

மே 17 இல் விவசாயிகள் சங்கங்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சென்னை,மே 5- முழுமையான ஆய்வு மேற்கொள்ளா மல், அவசர கதியில் செறிவூட்டப்பட்ட அரி சியை ரேசன் கடைகளில் வழங்கக் கூடாது. அரசு அறிவிக்கும் சிறப்புத் திட்டங் களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள  நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகளை தனியாரிடம் தாரைவார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலி யுறுத்தி மே 17 அன்று விவசாயிகள் சங்கங்கள் தமிழகம் முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி. நடராஜன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நில ஒருங்கிணைப்புச் சட்டம்

கடந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளன. அவற்றில் மிக  முக்கியமான சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023. இந்த சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உட்பட தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.  நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலை யில், அந்த சட்டங்களில் குறிப்பிட்டுள்ள படி, புதிய திட்டங்களுக்கு விவசாயி களிடம் நிலத்தை கையகப்படுத்தும் போது நியாயமான, சட்டப்படியான இழப்பீட்டை பெறுவதற்கே விவசாயிகள் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய நில  ஒருங்கிணைப்பு சட்டம் எந்த வகை யிலும் ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயி களின் உயிர்நாடியாக உள்ள நிலங் களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திடவும் உதவாது. மாறாக கார்ப்பரேட்  நிறு வனங்களுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் பயன்படும். எனவே, தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை முழுமையாக திரும்பப்பெற வேண்டும். 

செறிவூட்டப்பட்ட அரிசி

மேலும் ஒன்றிய பாஜக அரசு, பொது விநியோக கடைகளிலும், ஊட்டச் சத்து மையங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து  தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங் களிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். எந்தவிதமான முழுமையான ஆய்வு களும் மேற்கொள்ளாமல், அவசர கதி யில் மக்கள் மத்தியில் எவ்விதமான விழிப்புணர்வும் இல்லாத நிலையில் செறி வூட்டப்பட்ட அரிசியை ரேசன் கடை களில் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை யும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.  மேற்கண்ட இரண்டு கோரிக்கை களையும் வலியுறுத்தி மே 17 அன்று தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில் இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மாநில நிர்வாகிகள் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.