states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் வெள்ளியன்று அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், பழைய ஓய்வூதியத்  திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டம்  கொண்டுவரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை - மைசூரு ‘வந்தே பாரத்’ ரயிலும் சேதம்!

தென்னிந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை நவம்பர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயிலானது நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயிலாக இருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு மைசூருவிலிருந்து சென்னை  வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டியின் மீது மோதியது. இதில் ரயிலின் முன்பக்க பகுதி சேதமடைந்தது. அக்டோபர் மாதம் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை 5 முறை மாடுகள் மோதி வந்தே பாரத் ரயில்கள் சேதம் அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு

18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25  வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாட்டு உதவி  இயக்குநர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஆகிய குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அக்டோபர் 30 அன்று தேர்வு அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு சனிக்கிழமையன்று (நவம்பர் 19) நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

மேற்குவங்க ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் நியமனம்!

மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவராக கடந்த ஜூலை மாதத்தில் பதவியேற்றதைத் தொடர்ந்து, மணிப்பூா் மாநில ஆளுநர் இல. கணேசன் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சி.வி. ஆனந்த போஸை மேற்கு வங்க ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1977 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த போஸ், கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். கேரள முதல்வரின் செயலராகவும், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் பதவி வகித்துள்ளார்.

அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக் காலம் நீட்டிப்பு!

சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குநரக தலைவர்களின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாக மாற்றி ஒன்றிய பாஜக அரசு கடந்த 2021 நவம்பர் 18 அன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் மூலம், நவம்பர் 19 அன்று ஓய்வுபெறவிருந்த அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் 2022 நவம்பர் 18 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அமலாக்கத்துறையில் ஓராண்டு சேவை நீட்டிப்பைப் பெற்ற முதல் நபராக எஸ்.கே. மிஸ்ரா இருந்தார். அப்போதே இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், மிஸ்ராவின் பதவிக் காலம் 2023 நவம்பர் 18 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் முதல் பொம்முசந்திரா வரை  மெட்ரோ ரயில் பாதை அமைகிறது

சென்னை, நவ.18 தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் முதல் பொம்முசந்திரா வரை 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. அதற்கான முழு சாத்தியக் கூறு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. முழு அளவில் அது குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ஓசூரில் இருந்து தமிழக எல்லைப்பகுதி வரை தமிழக அரசும், கர்நாடக எல்லைக்குள் கர்நாடக அரசும் கட்டுமான பணிகள் மற்றும் டெண்டர் பணி களை மேற்கொள்ளும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி உள்ளது. 5 வருடத்திற்குள் அதற்கான பணிகள் முடிந்து ஓசூ ரில் இருந்து பெங்களூருக்கு ஒரே டிக்கெட் மூலம்  செல்லலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறினார். ஓசூர்-பெங்களூர் மெட்ரோ வழித் தடம் 2 மாநில ஒருங்கிணைந்த மெட்ரோ திட்டமாக அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோருக்கு குறுஞ்செய்தி: அமைச்சர்

சென்னை, நவ.18- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளி யிடப்பட்டு, அனைத்து மின் நுகர்வோருக் கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மின் இணைப்புடன் ஆதார்  எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு  வெளியிடப்பட்டு, அனைத்து மின் நுகர் வோருக்கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி  அனுப்ப இருக்கிறோம். அதேநேரம், ஒரு சில இடங்களில் மின்  இணைப்பு பெற்றவர்கள் இறந்திருந்தால், அவர்களது பெயரில் உள்ள மின் இணைப்பு கள் மாற்றப்படாமல் உள்ளன. அவை குறித்து தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மின் இணைப்பு பெற்றவர் கள் இறந்து போயிருந்தால், அந்த இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்வ தற்காக ஒரு சிறப்பு நேர்வாக அதற்கான ஏற்பாடுகளும் செய்யவுள்ளோம்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “சென்னையைப் பொறுத்தவரை 3200-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு எங்கெல்லாம் மழை பாதிப்பு  ஏற்பட்டதோ, அங்கெல்லாம் சரி செய்யப்பட்டு விட்டது. அதனால்தான் இந்த முறை மழை  பெய்தாலும்கூட மின் விநியோகம் எங்கேயும்  தடைபடவில்லை என்றும் அவர் கூறினார்.

துணை ஆட்சியர்,  டி.எஸ்.பிகளுக்கு  இன்று முதல் நிலை எழுத்து தேர்வு

சென்னை,நவ.18-  தமிழ்நாடு முமுவதும் 18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் கண் காணிப்பாளர்கள், 13 கூட்டுறவு சங்க துணை  பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணை யர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய  குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள  92 பணி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலையில் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்டோபர் 30 அன்று இந்த தேர்வு  நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில  காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படு வதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு இன்று நவ.19 நடை பெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு  நடக்கிறது. சென்னை உள்பட 38 மாவட்டங்க ளில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என். பி.எஸ்.சி வெளியிட்டு இருக்கிறது. தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஆர்டர்லி முறை கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை,நவ.18- ஆர்டர்லி முறையை ஒழித்து ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் சிறப்பு காவல் படைக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்த ரவு பிறப்பித்தது. ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்த காவலரை பணிநீக்கம் செய்து பிறப் பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

வினாத்தாள் குளறுபடி: தேர்வு ரத்து

சென்னை, நவ.18- சென்னை பல்கலைக்க ழகத்திற்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவர்களுக் கான தமிழ் அரியர் தேர்வுக்கு  வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியிருந்தது.  அதாவது 3-வது பருவத்  தேர்வு எழுத வந்த மாணவர்க ளுக்கு 4-வது பருவத்திற் கான வினாத்தாள் வழங்கப் பட்டிருந்தது. இதனால் மாண வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தேர்வெழுத முடி யாமல் மாணவர்கள் தேர்வு அறையில் அமர்ந்துள்ளனர். இந்த விவகாரம் உடனடி யாக சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கவுரி யின் கவனத்துக்கு கொண்டு  செல்லப்பட்டது. இதை யடுத்து, தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்த தேர்வு வேறு ஒரு நாள் நடத்தப்படும். அது குறித்த அறிவிப்பு பின்னர்  வெளியிடப்படும் என்று அறி வித்திருந்தார். இந்நிலை யில், பிற்பகலில் நடை பெறவிருந்த 4-வது பருவத் தேர்வுக்கான தமிழ் தேர்வை யும் ரத்து செய்து சென்னைப் பல்கலைக்கழகம் நிர்வா கம் அறிவிப்பு வெளியிட்டுள் ளது.

‘தொழில் நிறுவனங்களை ஈர்க்கும்   மாநிலம் தமிழகம்’: முதல்வர்

சென்னை,நவ.18- திமுக ஆட்சி வந்த 15 மாத காலத்தில்  தமிழகத்தில் ஏராளமான புதிய தொழில்கள்  உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து தமிழ கத்தில் நிறுவனங்களைத் தொடங்கு கின்றனர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார். சென்னையில் தென்னிந்திய வேலை யளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா வெள்ளியன்று (நவ.18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது  இங்குதான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற் சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழி லாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது”என்றார். இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத்  தமிழகத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பை யும் அரசானது உங்களுக்கு வழங்கும்.  தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்க ளையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும்  உங்களுக்கு உண்டு. அரசு, தொழிலதிபர் கள் - தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவிற்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

மக்கள் தொகை குறைந்து வருகிறது;  20 ஆண்டுகளில்  ஒரு நிலையை அடையும் : உச்சநீதிமன்றம்

புதுதில்லி,நவ.18- மக்கள் தொகை பெருக்கம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி அஸ்வினி குமார் உபாத்யாயா தாக்கல் செய்த மனுவை வெள்ளியன்று  நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்  தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விஷயம் அரசாங்கத்தின் எல்லைக்குள் மட்டுமே உள்ளது. இதில் சமூகப் பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது. மக்கள்தொகை குறைந்து வருகிறது.  இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் ஒரு நிலையை அடையும். மக்கள் தொகையை எங்களால் குறைக்க முடியாது என்றது. “குண்டு வெடிப்பை விட மக்கள்தொகை (பெருக்கம்) வெடிப்பு மிகவும் ஆபத்தானது. பயனுள்ள மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தாமல், ஆரோக்கியமான இந்தியா, எழுத்தறிவு இந்தியா, வளமான இந்தியா, வலிமையான இந்தியா, பாதுகாப்பான இந்தியா, உணர்திறன் மிக்க இந்தியா, தூய்மை இந்தியா மற்றும் ஊழல் மற்றும் குற்றமற்ற இந்தியா என்ற  பிரச்சாரங்கள் வெற்றியடையாது என்று குமார் உபாத்யாயா வாதிட்டார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தம்பதிகளை “குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை” பெற்றுக்கொள்ள வற்புறுத்த முடியாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ‘குடும்பத்தின் எண்ணிக்கையை தம்பதிகள் தான் தீர்மானிக்க வேண்டும்’  ஆனால் இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதத்தில் இந்தியா “தொடர்ச்சியான சரிவை” சந்தித்து வருகிறது. தேசிய மக்கள்தொகைக் கொள்கை 2000- வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது 3.2 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம்  2018-ஆம் ஆண்டில்  2.2 ஆகக் குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.