states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தது, தற்போது 72 டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. விலையைக் குறைக்க வேண்டும் என்ற மக்க ளின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில், இழப்பில் இருந்து மீண்டு விட்ட தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ள தாகவும், கச்சா எண்ணெய் விலையின் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை யை குறைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்வே ஊழியர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்த சிபிஐ!

288 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை துவங்கி யுள்ள சிபிஐ அதிகாரிகள், புதனன்று 2வது நாளாக பாகனகா பஜார் ரயில் நிலை யத்துக்கு சென்று சுமார் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்தில்  மெயின் லைன், லூப் லைன், சிக்னல் அறை, கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை தடய அறிவியல்  துறை நிபுணர்கள், தொழில்நுட்ப குழுவினருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், விபத்தின் போது பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் சிலரது செல்போன் களையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாட்னா கூட்டத்தில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள்!

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை முறியடிப்பதற்கு, இப்போதே எதிர்க்கட்சிகளை ஓரணி யில் திரட்டும் முயற்சியாக, பீகார் தலைநகர் பாட்னாவில் 23-ஆம் தேதி மாபெரும் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பேசியிருக்கும் பீகார் துணைமுதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி, “ஜூன் 23 கூட்டத்தில் அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,  மேற்கு  வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மோடியின் படிப்பு விவகாரம்: கெஜ்ரிவால் ஆஜராக உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதியை கோரிய விவகாரத்தில், குஜராத் பல்கலைக்கழ கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அதன் பதிவாளர் பியூஷ் படேல், அக மதாபாத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தில்லி முதல்வர்  கெஜ்ரிவால், எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் ஜூன் 7-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால், கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகிய இருவரும் தங்கள்  தரப்பு வாதத்தை பதிவு செய்ய ஜூலை 13-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அகமதா பாத் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயேஷ் சோவதியா உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது: சரத் பவார்

“தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது நாட்டில் பாஜக-வுக்கு எதிரான அலை வீசு வதாக நான் கருதுகிறேன். கர்நாடகத் தேர்தல் முடிவை பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற் கான மனநிலையில் இருப்பது தெரிகிறது. மக்களின் மனநிலை இதேபோல தொடர்ந்தால் நாட்டில்  புதிய மாற்றம் ஏற்படும். இதைக் கூறுவதற்கு வருங்காலத்தை கணிக்கும் ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.

விடுதலைப் போராட்ட வரலாற்றையே மாற்ற முயற்சி நடக்கிறது

பீகார் மாநிலத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மாநில முதல்வரும், ஜக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் உரையாற்றினார். அப்போது, “இந்த நாட்டின் முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்ப வர்கள்தான், அவர்கள் வேறெங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல என்று என் தந்தை எனக்கு போதித்து இருக்கிறார். ஆனால், தற்போதைய சூழலில் அரசியல் சாசனத்துக்கு எதிரான எல்லாவித மான செயல்களும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவும் அவர்கள் (பாஜகவினர்) முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சி நடக்கிறது” என்று நிதிஷ்குமார் குற்றம் சாட்டினார்.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் துவக்கம்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக  தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். கிரிமினல் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால், எம்.பி. பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலி யான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்தி ரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணை யம் அழைப்பு விடுத்து உள்ளது. இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என கோழிக்கோடு துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி சேரும் எண்ணமில்லை: தேவகவுடா

“க‌ ர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி போராடி வருகிற‌து. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட‌ இரு கட்சி களையும் கடுமையாக விமர்சித்தோம். ஆனால், மக்களவைத் தேர்தலில் நாங்கள் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.  யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து மக்களவைத் தேர்தலின்போது முடிவெடுப்போம்” என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களை கடத்த முயற்சி

தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை இரவு, மாணவர்கள் இருவரை கடத்தும் முயற்சி நடந்துள்ளது. வெளியிலிருந்து காரில் வந்த நபர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பல்கலைக் கழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வரும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு ஆளுநரே காரணம்: அமைச்சர்

சென்னை, ஜூன் 8- பட்டமளிப்பு விழாவை ஆளுநர் வேண்டுமென்ற காலதாமதம் செய்கி றார் என உயர்கல்வித் துறை அமைச்சர்  பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஒன்றிய அமைச்சர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்த வேண் டும் எனக் கோருவதால் தாமதமாகி றது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 9.29 லட்சம் மாணவர்கள் பட்டமளிப்புக்காக காத்திருக்கின்றனர்”என்றார். ஆளுநரின் தலையீட்டால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம்  ஏற்படுகிறது. தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பட்ட மளிப்பு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு தயாராகவுள்ளது. பட்டமளிப்பு விழா குறித்து ஆளுநர் கேட்பது கூட இல்லை என அமைச்சர் கூறினார்.

800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை

சென்னை,ஜூன் 8- தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுக  ளுக்கு முன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்க ளாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சுகாதாரத் துறை யில் காலியாக உள்ள 800 ஓட்டுநர்கள்  பணியிடங்களை நிரப்பவும் அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கா மல், ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்” என்று  கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்  முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு  சுகாதாரத்துறையிலுள்ள 800 ஓட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுர்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும்,  இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.