திண்டுக்கல், அக்.19- பஞ்சுவிலையை கட்டுப்படுத்தி பஞ்சா லை, பின்னலாடை, ஆயத்த ஆடை, தொழி லை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பருத்தி விவசாயம், பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் அக்டோபர் 19 புதனன்று நடைபெற்ற இக் கருத்தரங்கில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: வெள்ளைத்தங்கம் என்று சொல்லக் கூடிய பருத்தி இந்தியாவின் பாரம்பரிய பயிராகவும், தொழிலாகவும் விளங்குகிறது. பருத்தி தொழிலில் நெருக்கடி நிலவுகிறது. பருத்தி அத்தியாவசியப் பொருள் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்டதால் பருத்தியை யார் வேண்டுமானாலும் பதுக்கி வைக்க முடி யும். நாடு முழுவதும் பருத்தி விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் போது விவசாயிகளது உற்பத்திச் செலவை கணக்கில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முன் வைக்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து இந்திய பருத்தி கழகம் மூலமாக பருத்தியை கொள்முதல் செய்து உள்நாட்டு பஞ்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்று பஞ்சாலை சங்கங்கள் சார்பிலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
கார்ப்பரேட்களால் பஞ்சு விலை உயர்வு-பற்றாக்குறை
கார்ப்பரேட் நிறுவனங்கள் பருத்தி கொள்முதலில் ஈடுபட்டு பதுக்கி வைப்ப துடன் லாப நோக்கில் ஏற்றுமதியும் செய்கின்றன. இதன் விளைவாக பஞ்சு விலை உயர்வதோடு பற்றாக்குறையும் ஏற்படு கிறது. இதனால் நூல் விலையேறுகிறது. ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு வருடத்திற்கு 120 முதல் 140 லட்சம் பேல் பஞ்சு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டின் இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பருத்தி சாகுபடி பரப்பளவும் உற்பத்தியும் உயரவில்லை. தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் மூலம் 5 ஆண்டுக்கு 6 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய உத்தே சித்து 3.34 லட்சம் ஏக்கர் தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தரமான பருத்தி விதைகளை கொடுத்து சாகுபடி செலவுகளை குறைத்திடும் வகையில் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். பஞ்சு பற்றாக்குறை ஏற்பட்டால் நூல் விலையை கட்டுப்படுத்தி ஆயத்த ஆடை, பின்னலாடை தொழிலை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய , மாநில அரசுகள் பருத்தி விவசாயம், பஞ்சாலை, ஆயத்த ஆடை, பின்னலாடை தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கொள்கை முடிவு களை செயல்படுத்தி இந்த தொழிலில் ஈடு பட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கிற்கு முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி தலைமை வகித்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், ஹில்சில்வர் ஏற்றுமதி யகம் இயக்குநர் அழகன் கருப்பணன், பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பத்ம நாபன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.ஆர். கணேசன், மாவட்டச்செயலாளர் கே.பிர பாகரன், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, சிஐடியு நிர்வாகி கே.காமராஜ், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய கவுன்சில் உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். (ந.நி)