states

ஓ.பன்னீர்செல்வம் தாயார் காலமானார்

தேனி,பிப்.25- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்( வயது 95).  வயதுமூப்பினால் உடல் நலிவுற்றி ருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு தேனியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு  உடல்நிலை மோசமாகவே பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.  கே.பாலகிருஷ்ணன் இரங்கல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது தாயார் மறை வுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு துணைவி யாரை இழந்த நிலையில் தற்போது தாயா ரையும் இழந்திருக்கும் அவருக்கும் குடும் பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்தார்.