சென்னை, ஏப்.25- 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை எதிர்க்கும் போராங் டங்களை நிறுத்திவைப்பதாக அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர்கள் ஜி.சுகுமாறன் (சிஐ டியு). ம.இராதாகிருஷ்ணன் (ஏஐடி யுசி).மு.சுப்பிரமணியன் (எச்.எம்.எஸ்), டி.வி.சேவியர் (ஐஎன்டியுசி), வி.சிவக்குமார் (ஏஐயுடிசி) எம். திரு நாவுக்கரசு (ஏஐசிசிடியு), ஆர்.சம்பத் (டபிள்யூ.பி.டி.யு.சி), இரா. அந்திரிதாஸ் (எம்எல்எப்). க.பேரறி வாளன் (எல்எல்எப்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: எட்டு மணி நேர வேலைக்கு பதி லாக மிக அதிகப்படியான வேலை நேரத்தை அனுமதிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்தத்தை தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி யது தொடர்பாக அனைத்து தொழிற் சங்கங்களும் கூடி மே 12 அன்று வேலைநிறுத்தம் செய்வதென்றும், அதற்கான ஆயத்த போராட் டத் திட்டங்களையும் அறிவித்திருந்தோம். பொதுப்பணித்துறை அமைச் சர், சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் 24. 4.2023 அன்று தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினார்கள். அனைத்து தொழிற்சங்கங்களும் திருத்தத்தை வாபஸ் பெற வேண் டும் என்று ஒரே குரலில் எடுத்து ரைத்தோம். தொழிலாளர் கருத்தை முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக அவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் அந்த சட்டத் திருத்தத்தை செயல்படாமல் நிறுத்தி வைப்ப தாக அறிவித்திருக்கிறார். தொழிற் சங்கங்களின் உணர்வைப் புரிந்து, உரிய மதிப்பளித்து, தொழில் அமை திக்கு வழிவகுக்கும் முறையில், உட னடியாக நடவடிக்கை மேற்கொண் டதை பாராட்டி, வரவேற்கிறோம். அரசு நடைமுறைகளுக்கு பொருத்த மான வகையில் விரைவாக, சட்ட திருத்தத்தை கைவிட்டு முற்றாக ரத்து செய்ய வேண்டும் என கேட் டுக்கொள்கிறோம். தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்கள் என்ற வரையறையைத் தாண்டி அனைத் துத் தொழிலாளர்களும், தமிழ் நாட்டு மக்களும் சட்டத் திருத்தத் திற்கு எதிராக நின்று தொழிலா ளர்களுக்கு ஆதரவளித்தனர். பாஜக தவிர மற்ற அனைத்து கட்சி களும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுத் தன. அனைவருக்கும் நன்றி தெரி விக்கிறோம். சட்டத்திருத்தத்தை விரைவில் அரசு ரத்து செய்யும் என நம்பு கிறோம். ஆகவே, மே 12 வேலை நிறுத்தம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களையும் நிறுத்தி வைப்பதென அனைத்து தொழிற் சங்க கூட்டுக்குழு முடிவு செய்கி றது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.