சென்னை, பிப்.11 - மார்ச் 19 ஆம் தேதி பணி புறக் கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், காலிப் பணியிடம் நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப்.10 அன்று மாநிலம் முழு வதும் அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட் டத்தை தொடங்கினர். இந்தப் போ ராட்டம் பிப்.11 அன்று நிறைவ டைந்தது. சென்னை எழிலகத்தில் நடை பெற்ற போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை மற்றும் தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர். அரசு ஊழியர் சங்கத் தின் பொதுச் செயலாளர் மு.சீனி வாசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். அப்போது செய்தியாளர்களி டம் அவர் கூறுகையில், “10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 72 லட்சம் பேர் காத்து கிடக்கும் நிலையில், அரசுத் துறைகளில் உள்ள 6 லட்சம் பணி யிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் 25 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப் பட்டு வந்தது, 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் 25 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 19 ஆம் தேதி பணி புறக் கணிப்பு போராட்டம் நடத்தப்படும். இது தவிர்த்து ஜாக்டோ-ஜியோ சார்பில் பிப்.14 அன்று வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட மும், பிப்.25 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியலும் நடை பெறும். அரசு ஊழியர்களை ஏமாற் றும் போக்கு தொடருமானால் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்துவோம்” என்றார்.