states

தீக்கதிர் விரைவு செய்திகள்

முகமது ஜூபைருக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

அமைதிக்கான நோபல் பரிசு நடப்பாண்டு இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஜூபைர்  மற்றும் ப்ரதிக் சின்ஹாவிற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்தியாவில் நிலவும் மதரீதியிலான தாக்குதலுக்கு பயன்படும் பொய்ச் செய்திகளை களை வதற்காக இந்த இரு பத்திரிகையாளர்களுக்கும் நோபல் வழங்கப்படலாம் என பிரபல ‘டைம்’ பத்தி ரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2017-ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் பொய்த் தக வல்களுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் முகமது ஜூபைர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி ஒன்றிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

இந்திய அரசு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) 10 பேரை பயங்கர வாதிகளாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத்,  காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்த பசிட் அகமது ரேஷி, காஷ்மீரின் சோபோரை சேர்ந்த இம்தியாஸ்  அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை சேர்ந்த ஜாபர் இக்பால் என்ற சலீம், புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான் என்ற ஷேக் சஹாப், ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் அகமது பெய்க்  என்ற பாபர், பூஞ்ச் பகுதியை சேர்ந்த ரபிக் நய் என்ற சுல்தான், தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத்  அகமது என்ற இத்ரீஸ், குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ், பாரமுல்லா  பகுதியை சேர்ந்த சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி ஆகியோரே பயங்கரவாதிகளாக அறி விக்கப்பட்ட 10 பேர் ஆவர்.

முலாயம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலா யம் சிங்-கிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் ஹரியானா வின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐசியூ-வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர  சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், “முலாயம் சிங் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கி றார். அவருக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது” என்று மேதாந்தா மருத்துவ மனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிவசேனாவுக்கு, காங்கிரஸ் - என்சிபி ஆதரவு!

சிவசேனா கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவையொட்டி, அந்தேரி (கிழக்கு) தொகுதிக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளும் ஷிண்டே அணி சார்பில், மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் முர்ஜி படேலும், உத்தவ் தாக்கரே  அணி வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேயின் மனைவி ருதுஜா லட்கேவும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த இடைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உத்தவ் அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் சரிவு

மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது புறக்கணிக்கப்படக் கூடாத ஒரு  முக்கியமான பிரச்சனை என்றும், இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் முஸ்லிம்களை மனத்தில் வைத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார். இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதில ளித்துள்ளார். அதில், “இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே டிஎன்ஏ-வாக இருந்தால், ஏற்றத்தாழ்வு எங்கே?” வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கருவுறுதல் விகிதத்தில் முஸ்லிம்  பெண்கள் கூர்மையான சரிவை கண்டிருக்கின்றனர் என்பதையும் பகவத்திற்கு நினைவுபடுத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் காவல்துறை பொய் சொல்கிறது!

தான் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ளதாக, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக பூபா முப்தி கூறியிருந்த நிலையில், அவருக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், “நான் பட்டனுக்கு பயணிக்க அனு மதிக்கப்பட மாட்டேன் என்று பாரமுல்லா எஸ்.பி. பாரமுல்லா ரயீஸ் முகமது பட் (செவ்வாயன்று இரவு) எனக்கு தெரிவித்தார். அதன்படியே (புதனன்று) ஜம்மு - காஷ்மீர் காவல்துறை எனது வீட்டின் வாயில்களை பூட்டி விட்டு, இப்போது பற்களால் பொய் சொல்கின்றனர். சட்ட அமலாக்க ஏஜென்சிகள் வெட்கமின்றி தங்கள் தடயங்களை மறைக்க முயல்வது வருத்தமளிக்கிறது” என மெகபூபா முப்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுத்தைக் குட்டிக்கு புட்டிப்பால் ஊட்டிய யோகி!

உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூரிலுள்ள அஷ்பக் உல்லா கான் விலங்கி யல் பூங்காவிற்குச் சென்று சிறுதைக் குட்டிக்கு புட்டிப்பால் ஊட்டினார். அந்த குட்டிக்கு ஓயர் என்று பெயர் சூட்டினார். பின்னர் அங்கு உரையாற்றிய ஆதித்யநாத், “இராவணனால் கடத்தப்பட்ட சீதையின் இருப்பிடம் தெரியாமல் இருந்தபோது, குரங்குகள், கரடிகள், ஆறுகள், மரங்கள் மற்றும் கற்கள் ராமரின் நண்பனாக மாறின. ராம ராஜ்ஜியத்தின் உணர்வின்படி, மனித நலனோடு  சேர்த்து ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாப்பதில் நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

குழந்தை கடத்துவதாக சாமியார்கள் மீது தாக்குதல்

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் சாமி யார்கள் 3 பேரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சாமியார்கள்  தசரா கண்காட்சியில் சில குழந்தைகளிடம் பேசியதை பார்த்த பொதுமக்கள் சிலர், அவர்கள் குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகித்து, இந்த தாக்குதலை நடத்தி யுள்ளனர். இதில் காயமடைந்த சாமியார்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள னர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. எனினும் அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

கேம் சேஞ்சரும்... நேம் சேஞ்சரும்’: பாஜக கேலி

தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், தனது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி யை, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்று பெயர் மாற்றியிருப்பது குறித்து  தெலுங்கானா பாஜக  தலைவர் பண்டி சஞ்சய் குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், டி.ஆர்.எஸ்.,  பி.ஆர்.எஸ். ஆக  மாறியிருப்பது பன்றிக்கு உதட்டுச்சாயம் போடுவது போன்றது” என்று கேலி செய்துள்ளார். “கே. சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமா ராவ், முன்பு தன்னை ‘கேம் சேஞ்சர்’ என அறிவித்துக் கொண்டார். ஆனால் அவரது தந்தை சந்திரசேகர ராவோ, ‘நேம் சேஞ்சர்’ ஆகிவிட்டார்” என்றும் கிண்டலடித்துள்ளார்.

அக். 17 சட்டப்பேரவை கூடவாய்ப்பு!

சென்னை,அக்.6- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17  ஆம்தேதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளை யாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டு வரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான  அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான  அறிக்கை இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

நான்கு நாட்களுக்கு கனமழை

சென்னை,அக்.6- ஆந்திர பகுதிகளின் மேல்நிலவும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அக்.7 முதல்  நான்கு நாட்கள் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் தொடர்ந்து இடியுடன்  கூடிய கனமழை நீட்டிக்கும் எனவும்,  காற்று  வேகமாக  வீசக்கூடும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு  39 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம்!

சென்னை,அக்.6- தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்பு களில் கையெழுத்திட்டார். இதில், ‘நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்’ என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதல் நகர்புறங்களில் வெள்ளை நிறபலகை கொண்ட  பேருந்துகளிலும், கிராமப்புறங்க ளில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வது பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக் கான கட்டணமில்லா திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 ஆம் தேதி வரை  176.84 கோடி பயணங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நாள் ஒன்று சராசரியாக 39.21 லட்சம்  பேர் பயணித்திருப்பதாகவும்  போக்குவரத்துத் துறை தெரிவித் துள்ளது.

ரூ.1.5 கோடி தங்கம் கொச்சியில் பறிமுதல்

கொச்சி, அக். 6- நெடும்பாச்சேரியில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3.25 கிலோ தங்கத்தை ஏர் சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவினர் பறி முதல் செய்தனர். துபாயில் இருந்து தங்கம் கொண்டு வந்த மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டனர். நெடும்பாச்சேரியில் சமீபகாலத்தில் நடந்த மிகப்பெரிய தங்க வேட்டை இதுவாகும். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நிகில் என்பவர் 1783.27 கிராம் தங்கத்தை திரவ வடிவில் நான்கு கேப்சூல்களில் சிறப்பு  கவரில் ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தார். மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஆசனவாயில் நான்கு கேப்சூல்களில் 1140 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். காசர்கோட்டை சேர்ந்த ஒருவர் 117 கிராம் தங்கத்தை பையில்  மறைத்து வைத்திருந்தார். மேலும் 200 கிராம் பொடி தங்கம் ஒரு அட்டை பெட்டிக்குள் தடவி கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கப்படவில்லை.

மீட்புப்பணிக்கு பணமில்லை : கைவிரிக்கிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், அக்.6- கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்குப் போதுமான பணம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கைவிரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 1,700 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகமாகும். மொத்தமுள்ள பாகிஸ்தான் மக்கள் தொகையான 22 கோடிப்பேரில் சுமார் மூன்றரைக்கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எங்கள் பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கான எதையும் செய்யும் நிலையில் நாங்கள் இல்லை என்று பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரகுமான் தெரிவித்துள்ளார். தங்களுக்கு உதவ வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவு, இதுவரையில் வரலாற்றில் காணாத ஒன்றாகும். 70 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 82 லட்சம் பேருக்கு உடனடியாக மருந்துகள் தேவைப்படுகின்றன. பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் கூடுதலாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார். பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் புதிய நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளன. சூழ்ந்துள்ள நீர் இன்னும் வடியாததால் நோயால் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. பட்டினி அதிகரித்திருக்கிறது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் மேற்கூரைகள் இல்லாத வெளியிடங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் சார்ந்த தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.