states

நீலகிரியில் இன்று மிக கனமழை பெய்யும்

சென்னை,அக்.8- நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்  வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக  ஞாயிற்றுக்கிழமை (அக்.9) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழையும்,  கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர்,  கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், நீலகிரி,  கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி,  மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர்,  அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வும் தெரிவித்துள்ளது. 11 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், நீலகிரி, ஈரோடு, நாமக்கல்,  சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.