states

தீக்கதிர் விரைவு செய்திகள்

2-வது நாளாக காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

ஜம்மு, டிச.24- ஜம்மு - காஷ்மீர் மற்றும் சண்டிக ரில் பயங்கரவாத செயல்களுடனான தொடர்பு பற்றி சனிக்கிழமையன்று காலை முதல் என்ஐஏ அதிரடி சோத னையில் ஈடுபட்டன. சந்தே கத்திற்குரிய நபர்களின் வீடுகள், அலு வலகங்கள் மற்றும் பிற இடங்களில் இந்த சோதனை நடந்தது. வெள் ளிக்கிழமையன்றும் இதேபோன்று காஷ்மீரின் குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோப்பூர் மற்றும் ஜம்மு  மாவட்டங்களில் சோதனை நடத்  தப்பட்டது. 14 இடங்களில் நடத்தப் பட்ட இந்த சோதனையில் சிம் கார்டு கள், டிஜிட்டல் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டன.

நடப்பது மோடி ஆட்சியல்ல; அதானி, அம்பானிகளின் ஆட்சி

தில்லி செங்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி  உரையாற்றினார். அப்போது, “இது நரேந்திர மோடியின் அரசு கிடையாது. இது அதானி, அம்பானிகளின் அரசு. உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத் திருப்ப இந்துக்கள், இஸ்லா மியர்கள் என பிரிவினை விதைக்கப்படுகிறது. பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் பக்கோடா விற்றுக் கொண்டிருக்கின்றனர்” என்று சாடினார். 

சந்தா கோச்சார் தம்பதிக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

வங்கிக் கடன் முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர்  தீபக் கோச்சார் ஆகியோரை மூன்று நாட்கள் சிபிஐ காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் அனுமதி  அளித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கொள்கைக்கு புறம்பாக வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ. 1,875 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இதற்குப் பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவரால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி கைமாறியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

‘அனுராக் பெரிய அமைச்சர்... நாங்கள் சிறிய மனிதர்கள்...’

“ராகுலின் நடைப்பயணம், ஊழல்வாதிகளை ஒன்று சேர்ப்பதற்கான நடைபயணம். அவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்திப்பதற்குப் பதில், நாட்டின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்” என்று கூறிய ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர், “கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத இவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்” என்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், “இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் இதில் இணைந்திருக்கிறார்கள். அதனால், அனுராக் தாக்கூர் அவ்வாறு கூறி இருக்கிறார். அவர் பெரிய அமைச்சர். நாங்கள் சிறிய மனிதர்கள்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

புதிய காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, டிச. 24- நாகையில் இருந்து 510 கி.மீ தொலைவில் நிலை கொண் டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி களில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டி னத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக ஞாயிறன்று (டிச. 25) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

பெரியார் நினைவு நாளில் அர்ச்சகர்கள் உறுதிமொழி

சென்னை, டிச.24- அனைத்துசாதியினரும் அர்ச்சக ராகும் போராட்டத்தை தொடர பெரியார் நினைவுநாளில் உறுதியேற்போம் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தந்தை பெரியார் நினைவு நாள்,  சாதி தீண்டாமையும் சூத்திரப்பட்ட மும் பெரியார் நெஞ்சில் தைத்த முட்கள்.  அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம்  என்பது அந்த முள்ளை அகற்ற முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பெருமுயற்சி. அந்த முயற்சிக்கு சனாதனிகள் நீதிமன்றத்தின் துணை யுடன் போட்டு வரும் முட்டுக்கட்டை கள் பல. அர்ச்சகர் பயிற்சி முடித்த பின்னரும்  பணி நியமனம் கிடைக்கா மல் 15 ஆண்டுகளாகக் காத்திருப்போர் பலர். அதற்கான போராட்டத்தை  தொடர்வோம் என்பதே பெரியார் நினைவு நாளில் நாம் மேற்கொள்ளும் உறுதி மொழி என அவர் கூறியுள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களை  பணி நிரந்தரம் செய்ய வைகோ வேண்டுகோள் 

சென்னை,டிச.24- அரசுப் பள்ளிகளில், பத்தாண்டு களாக உடற்கல்வி, ஓவியம், கணினி,  இசை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி  நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்  இவர்களை தமிழக அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செய லாளர் வைகோ மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலையில் இருக் கின்ற பட்டதாரி ஆசிரியர் குடும் பங்கள் வறுமையிலிருந்து விடுபட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான திராவிட மாடல் ஆட்சி  பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை களை கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து தை  திருநாள் பொங்கல் பரிசாக 12 ஆயிரம்  குடும்பங்களில் விளக்கேற்றிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தங்கம் விலை நிலவரம்

சென்னை, டிச. 24- தங்கம் விலை கடந்த வாரம் முதல் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.40,608-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு  30 காசுகள் அதிகரித்து ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74000-க்கு விற்பனையாகிறது.

ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையை தடுக்கக் கோரிக்கை

சென்னை, டிச.24- ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட   கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர்  ராமதாசு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனி யார் பேருந்துகளின் கட்டணம் அதி கரித்துள்ளது. சென்னை - மது ரைக்கு பயணிக்க அதிகபட்சமாக  ரூ.4999 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை  கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். பண்டிகைகளுக்கு முன்பாக  ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வ தும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன.   கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான்  நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத் துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல்  என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் பல முறை தீர்ப்பளித் திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி  பேருந்து சங்கங்களே கட்ட ணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப் பது  நீதிமன்ற அவமதிப்பு  என்றும்  அவர் அதில் கூறியுள்ளார். ஆம்னி  பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற் காக சட்டப்பூர்வ ஆணையத்தை  ஏற்படுத்த வேண்டும் என்றும் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

அரிசி கார்டுக்கு மட்டுமே பொங்கல் பரிசு

சென்னை, டிச. 24- அரிசி அட்டைதாரர்க ளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000  கிடைக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது.  பிஎச்எச், பிஎச்எச்-ஏஏஒய், என்பிஎச்எச், என்பி எச்எச்-எஸ், என்பிஎச் எச்-என்சி என 5 வகையான ரேசன் கார்டுகள் உள்ளன.  இதில், பிஎச்எச், பிஎச்எச்-ஏஏஒய்  ஆகிய இந்த இரு  ரேஷன் அரிசி அட்டைதாரர் களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

பாடம் கற்றுக் கொள்ளுங்கள் 

ஜெலன்சிக்கு ஈரான் அறிவுரை

டெஹ்ரான், டிச.24- அமெரிக்காவின் ஆதரவை நம்பி ஏமாந்து போன தலைவர்களின் நிலை என்ன ஆனது என்பதைப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்சிக்கு ஈரான் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையி லான சண்டையில் எந்த வித ஆதாரமும் இல் லாத குற்றச்சாட்டுகளை உக்ரைன் தரப்பிலி ருந்து ஈரான் மீது சுமத்தி வருகிறார்கள். உக் ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரானின் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின் றன என்ற குற்றச்சாட்டும் அதில் ஒன்றாகும். இத் தகைய குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில்தான் உக்ரைன் சுமத்திக் கொண்டிருக்கிறது என்று ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பா ளர் நாசீர் கனானி, “இது போன்ற குற்றச்சாட்டுக ளுக்கு தொடர்ந்து எங்கள் தரப்பில் பதில் சொல்லி வருகிறோம். உக்ரைன் மீதான தாக்கு தல்களுக்கு நாங்கள் எங்கள் ஆளில்லா விமா னங்களை அளிக்கவில்லை. இந்த சண்டை யில் நாங்கள் எந்தத்தரப்பிற்கும் ஆயுதங்க ளை தரமாட்டோம். அதேவேளையில், அமெரிக் காவை நம்பி அவர்களைத் திருப்திப்படுத்துவ தற்காக இதுபோன்ற போலியான குற்றச் சாட்டுகளைச் சுமத்த வேண்டாம். அவர்களை நம்பி ஏமாந்து போன தலைவர்களின் அனுப வங்களை நினைத்துப் பாருங்கள்” என்று குறிப்பிட்டார். அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத் தில் உரையாற்றியபோதும் உக்ரைன் ஜனாதி பதி ஜெலன்ஸ்கி ஈரான் மீது குற்றம் சாட்டி னார். அமெரிக்க நிர்வாகத்தை திருப்திப்படுத்து வதற்காக அவர் அப்படிப் பேசியிருப்பார் என்றும், ஈரானின் பொறுமையை சோதிக்கும் வகையில்தான் இதுபோன்ற பொய்யான குற்றச் சாட்டுகள் அமையும் என்றும் நாசீம் கனானி தெரிவித்திருக்கிறார். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒற்றுமையை ஈரான் மதிக்கும் என்றும், உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் அதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.