சென்னை,ஜன.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் தனது பேச்சை நிறைவு செய்வதற்கு முன்பாக, “சமூக, அரசியல், பொருளாதார, வாழ்வியல், பண்பாட்டு வளர்ச்சியை உள்ளடக்கிய தாகவே தமிழ்நாட்டு மாநில வளர்ச்சி அமைய வேண்டும் என்று கருதுகி றேன். அதற்கான திட்டமிடுதல்களை நாங்கள் செய்து வருகிறோம். ஏராள மான புதிய புதிய தொழில் நிறுவனங் களைத் தமிழ்நாட்டில் கொண்டு வருகிறோம். புத்தாக்கத் தொழில்க ளுக்கு முன்னுரிமை தருகிறோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்கு விக்கிறோம். புதிய தொழில் பேட்டை கள் தொடங்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம்.
வேலைகளுக்குத் தகுதியானவர்க ளாக இளைஞர்களை உயர்த்தி வருகிறோம். பெண்களைச், சொந்தக் காலில் நிற்பவர்களாக மாற்றிட தன்னம்பிக்கை ஊட்டி வருகிறோம். அவர்களது திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறோம். பள்ளி, கல்லூரிக ளில் ‘நான் முதல்வன்’ திட்டம் மூல மாக மாணவர்களை தனியாற்றல் கொண்டவர்களாக வளர்த்து வருகி றோம். இதுதான் புதிய தமிழ்நாடு! அறிவுசார் தமிழ்நாடு! வலிமை வாய்ந்த, வளம் நிறைந்த தமிழ்நாடு!! தமிழ்நாட்டின் இந்த இளைய சக்தியை அறிவுசக்தியாக, ஆற்றல் மிக்க சக்தியாக மாற்றி - அதனை தொழில் வளர்ச்சியோடு இணைக்கி றோம். மனித ஆற்றலின் மகத்தான சக்தியை அதிகப்படுத்துவதன் மூல மாக மாநில வளர்ச்சியை உயர்த்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியுடைய தனித்தன்மை”என்றும் குறிப்பிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதேபோலத்தான் நாங்கள் வேகமா கவும் - அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம். ‘நான்’ என்று சொல்லும் போது என்னை மட்டுமல்ல; அமைச்சரவையை மட்டு மல்ல; நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டு மொத்தமாகச் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன்.
டேஷ்போர்டு
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். என்னுடைய அறையில் ‘டேஷ் போர்டு’ வைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கி றது என்பதை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன்.
செயல்பாட்டில் அறிவிப்புகள்...
இந்த அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை மொத்தம் 3,346 அறிவிப்பு கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 86 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட் டுக்கு வந்துள்ளன. அதாவது 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை, அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 852 அறிவிப்புகள் நிறை வேற்றப்பட்டுள்ளன. 2,040 பணிகள் நடைபெற்று வருகின்றன. 422 அறிவிப்பு களுக்கு அரசாணை வெளியிட தொடர் புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32 அறிவிப்புகள் குறித்த கருத்துருக்கள் ஒன்றிய அரசினுடைய பரிசீலனையில் உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டில் எப்படி வளர்ச்சி அடைந்தோம் என்றால், சொன்னதைச் செய்தோம் அதனால் வளர்ந்துள்ளோம். அதுதான் உண்மை. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரம் மிக விளக்கமாகச் சொல்லி யிருக்கிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களினுடைய வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட் டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்க ளில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள் ளது. இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாடு அரசு அல்ல; ஒன்றிய அரசு தான் இதனைச் சொல்லியிருக்கிறது. இந்தியாவில் இருக்கிற பெரிய மாநி லங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்றால் அது சாதாரண மானது அல்ல.