states

img

கால்நடை - மீன் வளத்துறைகளுக்கு புதிய கட்டிடங்கள்

சென்னை, மார்ச் 9 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், வியாழ னன்று(மார்ச் 9) நடந்த நிகழ்வில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 189 கோடியே 49 லட்சம் செலவிலான புதிய  கட்டடங்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டி,  மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ. 47.50 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் ரூ. 61 கோடியே 32  லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 11 கோடியே 66 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாநில அளவில் தேர்வு  செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக் கான முதல் பரிசு ஒரு லட்சத்தை திருப்பூர்  மாவட்டம் ரமேஷ், இரண்டாம் பரிசு  ரூ. 75 ஆயிரத்தை தென்காசி சமுத்திரம்,  மூன்றாம் பரிசு ரூ. 50 ஆயிரத்தை தரும புரி மாவட்டம் சங்கர் ஆகியோருக்கு முதலமைச்சர் வழங்கினார். மாநில அளவில் சிறந்த தானி யங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ரூ. 1 லட்சம் திருப்பூர் மாவட்டம்  பெருமாள், இரண்டாவது பரிசு கிருஷ்ணகிரி மாவட்டம் சேகர், மூன்றாவது பரிசு திருப்பூர் மாவட்டம் முரளிகிருஷ்ணனும் பெற்றனர்.