states

பன்னாட்டு மூலதனத்தின் வணிக சூதாட்டமே நீட், கியூட் தேர்வுகள்

சென்னை, மே 24- நீட், கியூட் தேர்வு பன் னாட்டு மூலதனத்தின் வணிக சூதாட்டம் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக கல்வித்துறையில் மக்கள் சார்ந்த, மாணவர்கள் நலன் சார்ந்த எந்த முடிவும் எடுக்க வில்லை. தற்போது செயல் பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகளைக் கூட பல வீனப்படுத்தும் நடவடிக் கையில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது.  சைனிக் பள்ளிக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காததால் அவை சுய நிதி பள்ளிகளாக மாறிக் கொண்டிருக்கிறது. கேந்தி ரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது. அதற்கு நேர் எதிராக பிஎம்ஸ்ரீ மாதிரி பள்ளிகளை ஒன்றிய அரசு முன் வைக்கிறது. நவோதயா பள்ளிகளே கூடாது என்றும், மாதிரி பள்ளிகள் சமமற்ற கற்றல் வாய்ப்பை உருவாக் குகிறது என்றும், அது சமத்து வத்திற்கு எதிரானது என்றும் சுந்தரவடிவேலு கடுமையாக எதிர்த்துள்ளார். ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ஆச்சார்யா ராமமூர்த்தி கமிட்டி கூட நவோதயா பள்ளிகள் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு பிஎம்ஸ்ரீ பள்ளிகளை துவக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கு நிர்ப் பந்தம் கொடுத்து வருகிறது.  புதிய தேசியக் கல்விக் கொள்கை எண்ணறிவு, எழுத்தறிவு, வேலைத் திறன் என்று அனைத்தையும் சுருக்கி விடுகிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கன்னி யமிக்க மனிதனாக வாழ்வ தற்கான வாய்ப்பு பறிக்கப் படும். அடிப்படை உரிமை களை உணர முடியாது, மனித உரிமை கோட்பாடு கள், ஜனநாயகத்தன்மை தெரியாமல் போய்விடும். விலங்கை போல் வாழக் கூடிய சூழல் ஏற்படும். அதனால்தான் இந்திய அள வில் முதல் முறையாக புதிய தேசியக் கல்விக் கொள் கையை நிராகரிப்பு என்ற முழக்கம் வைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கொண்டு வரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரும் போது சில மாற்றங்களை கூறினார்களே தவிர அதை முற்றிலும் எதிர்க்கவில்லை. நீட், கியூட் இரண்டுமே வணிக சூதாட்டம். அதன் மூலம் பன்னாட்டு நிதி மூல தனம் லாபம் ஈட்டுகிறது. அந்த லாபத்தில் 18 விழுக் காடு ஜிஎஸ்டி வரியாக பயிற்சிக் கூடங்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைக் கிறது. முதலாளிகளுக்கு லாபம், அரசிற்கு வருமானம், ஆளும் அரசியல் கட்சிக்கு தேர்தல் பாண்ட் என்ற முறை யில் நன்மை செய்யக் கூடி யதுதான் நீட், கியூட் என்ற சூதாட்டம். இது தகுதிப்படு த்துவதற்கான தேர்வு அல்ல. எனவே தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கு என கல்விக் கொள்கையை விரைந்து உருவாக்க வேண்டும். நீட் தமிழ்நாட்டிற்கு பொருந் தாது என்ற வகையில் மருத்துவ மாணவர் சேர்க் கைக்கான சட்ட முன்வடிவை இயற்ற வேண்டும். அதற்கு குடியரசு தலைவரின் ஒப்பு தலை பெறுவதற்கான நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.