states

நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவர் தற்கொலை

திருப்பத்தூர், மே 18- நாட்றம்பள்ளி அருகே, ‘நீட்’ தேர்வு  முடிவுக்கு பயந்து, மாணவர் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம் பள்ளி ஜங்களாபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்( 17), 12 ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற இவர், கடந்த, 7 ஆம் தேதி, ‘நீட்’ தேர்வு எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்ப தால் மனமுடைந்து காணப்பட்ட அவர்,  வீட்டின் அறையில் தூக்கிட்டுக் கொண்டார். இதைப்பார்த்த பெற்றோர், அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பரமேஸ்வரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.