சிதம்பரம் மே 25- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெற வில்லை எனதேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள் ளார். தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்ற தாகக் கடந்த ஆண்டு நான்கு தீட்சி தர்களின் குடும்பங்களின் மீது சிதம்ப ரம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் சமூக நலத்துறை அலு வலர்கள் அளித்த புகாரின் பேரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் குழந்தைத்திருமணம் செய்யப்பட்ட தற்காக அரசின் விதிகளுக்கு உட்பட்டு சோதனைகள் நடைபெற்றது. இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தமிழ்நாடு ஆளு நர் ரவிக்கு புகார் அளித்தனர். அதில் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தைத் திரு மணம் நடைபெறவில்லை என்றும் அவர்களின் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாகப் புகாரில் தெரிவித்திருந்தனர்.
அதன் பேரில் ஆளுநர் ரவி ஊட கத்திற்கு அளித்த பேட்டியில் நட ராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர்களுக்கு கன்னித்தன் மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் பரிசோதனை நடை பெற்றதாகவும், இது சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு எடுத்துக்காட்டு எனப் பேட்டியளித்திருந்தார். இதனையொட்டி தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலே ந்திரபாபு,இருவிரல் சோதனை நடை பெறவில்லை என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த நிலையில், தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பி னர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழு வினர் சிதம்பரம் நடராஜர் கோவி லுக்கு உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சி தர்களின் குழந்தை மற்றும் தீட்சி தர்களிடம் விசாரணை மேற்கொண்ட னர். அதேபோல் அப்போது பரி சோதனை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசார ணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஆனந்த், நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்ட தாகவும், விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதி யாகி உள்ளதாக கூறினார் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணங்களை நடத்தி வருகி றார்கள் என்று கூறுபவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு விசா ரணை அறிக்கையை 2 நாட்களுக் குள் ஆணையத்தில் சமர்ப்பிப்போம் என்றும் அவர் கூறினார்.