states

சாமானியர்க்கு சேவை செய்வதே எனது முன்னுரிமை

தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் பேட்டி

புதுதில்லி, நவ.10- உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் புதனன்று பதவி  ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளி கையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு, குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிர மாணம் செய்து வைத்தார்.  புதிய தலைமை நீதிபதியாக பொறுப்  பேற்றுக் கொண்டுள்ள டி.ஒய். சந்திரசூட், 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை இப்பதவியை வகிக்க உள்ளார். இதனிடையே, தலைமை  நீதிபதி பதவியை ஏற்றபின் செய்தியாளர் களைச் சந்தித்த டி.ஒய். சந்திரசூட் “சாதாரண குடிமகனுக்கு சேவை செய்வதே எனது முன்னு ரிமை” என்று தெரிவித்துள்ளார். மேலும்,  “நீதித்துறை செயல்முறைகளில் சீர்திருத்தங் கள் மேற்கொள்ளப்படும்” என்றதுடன், “வார்த்  தைகள் அல்ல; எனது செயல்களே பேசும்” என்று குறிப்பிட்டுள்ளார். வியாழனன்று நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் ஜே.பி. பர்திவாலா அமர்வில் அமர்ந்தி ருந்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,  புதிய வழக்குகள் தானாகவே விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது, “திங்கள், செவ்வாய், புதன் ஆகிய  தேதிகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து  விஷயங்களையும் அடுத்த திங்கட்கிழமைக் குள் பட்டியலிட வேண்டும் என்று பதிவாள ருக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். எனவே, வழக்குகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கு ஒரு தானியங்கி தேதி வழங்கப்படும். தானி யங்கி பட்டியல் இருக்கும். யாருக்காவது ஏதா வது அவசரம் இருந்தால், அதனை நாங்களே இங்கு குறிப்பிடுவோம். இல்லையெனில், வழி காட்டுதல்கள் அடிப்படையில் எப்போதும் போல வழக்குகள் தானாகவே விசாரணைக்கு பட்டியலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.