states

அரசமைப்புச் சட்டம் 44ஆவது பிரிவை நீக்குக!

சென்னை,மார்ச் 11- அரசியலமைப்புச் சட்டம் 44 ஆவது பிரிவை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்று இந்திய  யூனியன் முஸ்லீம் லீக் பவள  விழா மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு பவள விழா  அகில இந்திய மாநாடு இம்மாதம்  8,9,10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. முதல் நாளில்  75 இணைகளுக்கு, கூட்டுத் திருமண நிகழ்ச்சியும், இரண்டாம் நாளன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரதி நிதிகள் மாநாடு, புத்தக வெளி யீட்டு நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும், “தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிகளில் மாணவர், இளைஞர், மகளிர், தொழிலாளர், அயலக இந்தியர்களின் பங்க ளிப்பு”, “பொறுப்பான அரசியலின்  கண்ணியமான வாழ்க்கை” எனும் தலைப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. பவள விழா மாநாடு சென்னை கொட்டிவாக்கம் (ஓஎம்ஆர்), ஒய்எம்சிஏ மைதா னத்தில், கொடியேற்றத்துடன் பவளவிழா மாநாடு துவங்கியது. கொடி அணிவகுப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும்  அதன் தலைவர்களது வரலாற்றுப்  பதிவுகளைக் கொண்ட புகைப் படக் கண்காட்சி உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில்  தேசிய பொதுச்  செயலாளரும் கேரள சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத்  தலைவருமான பீ.கே. குஞ்ஞாலிக் குட்டி அறிமுகவுரையாற்றினார்.  தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்றார். மக்க ளவை மற்றும் சட்டமன்ற உறுப்பி னர் உள்ளிட்ட பலரும் உரை யாற்றினர்.

தீர்மானங்கள்

தேசத்தின் ஒற்றுமை, ஒரு மைப்பாடு மற்றும் சமூகங்க ளிடையே சகோதரத்துவத்தை நாம் பாதுகாக்க மத அடிப் படையில் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்காக சுயநல வாதிகள் தவறாகப் பயன்படுத் தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கொள்கைகளின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ள 44 ஆவது பிரிவை  ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய  அரசை வலியுறுத்துகிறோம். தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களை வழிபாட்டுக்குத் திறக்க வேண்டும், அனைத்து  மாநிலங்களிலும் யூனியன் பிர தேசங்களிலும் சிறுபான்மையினர் ஆணையங்கள் அமைக்க வேண்டும், பொதுத்துறை நிறு வனங்களில் காலி இடங்களை நிரப்பும் குழுவில் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை முஸ்லிம் உறுப்பி னர்கள் இருக்க வேண்டும், மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டங் களைத் திரும்பப் பெற வேண்டும்,  சிறுபான்மையினர், பிற்படுத் தப்பட்டோருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான நிதி  ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண் டும், வரலாற்றுப் புத்தகங்களில் வரலாறுகளைத் திரிப்பதை நிறுத்த  வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.