states

கருணாநிதி நினைவிடத்தில் சுரங்க அறையுடன் அருங்காட்சியகம்

சென்னை,பிப்.1- முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில் சுரங்க அறையுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.  அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி நடுக் கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி  உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட  பேனா நினைவுச்சின்னம் அமைக்கப் படவுள்ளது. இந்த பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெய ரிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும்  நடைபெற்றது. இந்த பணிகள் ஒரு  புறம் நடந்து கொண்டிருக்க கருணா நிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது சிந்தனைகள் எழுத்தோவியங்கள், இலக்கியம், கதை வசனம், அவர்  செயல்படுத்திய திட்டங்கள் ஆகிய வற்றை பிரதிபலிக்கும் வகையில் நவீன ஒளி படங்களும் அருங்காட்சியகமாக அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது. 2 ஆயிரம் சதுர மீட்டர் பரபரப்பள வில் சுரங்க அறையுடன் உருவாகும் இந்த கண்காட்சி ரூ.80 லட்சம் செலவில் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 40 சென்ட் நிலத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது அதை 160 சென்ட் நிலத்தில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

நினைவிடத்தின் ஒரு பகுதியில் நூலகங்கள், டிஜிட்டல் முறையிலான காட்சியங்கள், ஒலி-ஒளி அமைப்புகள், வண்ண ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற உள்ளன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகை யில் விசாலமான பாலம் கட்டப்படு கிறது. இதற்காக கருணாநிதி நினை விடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகை யில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்து  உள்ளனர். பாலத்தின் நடந்து செல்லும்  பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டர், கடலின் மீது 360 மீட்டர் அமையும்  வகையில் கட்டப்படுகிறது. கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பினாலான இந்த கண்ணாடி பாலம் அமைய உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.