states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஒப்பந்த ஓட்டுநர்கள்: தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை,பிப்.13-  தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்க பணி மனைக்குள் பேருந்துகளை நிறுத்து தல், டீசல் நிரப்புதல் போன்ற பணிக ளில் ஈடுபடும் பணிமனை ஓட்டுநர்களி டம், வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் பணியை வழங்க மாநகர  போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.  பணிமனைக்குள் பேருந்துகளை இயக்கும் பணியை ஒப்பந்த நிறுவனங் களின் ஓட்டுநர்கள் மூலம் மேற்கொள் ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்ள ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ் என்ற  நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த  நிறுவனம் மூலம் தேர்வான ஓட்டுநர்கள்  வருகிற 15 ஆம் தேதி முதல் பணியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு சிஐடியு, அண்ணா உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  பணிமனை ஓட்டுநர் பணியை  அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களா லேயே மேற்கொள்ள முடியும். சமீ பத்தில் குன்றத்தூர், அம்பத்தூர் பணி மனைகளில் பேருந்தை இயக்கிய போது விபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களில் மூத்த  ஓட்டுநர்களை மட்டுமே நியமிக்க  வேண்டும். பணியாளர் பற்றாக் குறையை போக்க நியமன நடவடிக் கையை நிர்வாகம் விரைந்து தொடங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கிறோம்.  போக்குவரத்து துறையில் டிஎன்பி எஸ்சி மூலம் பணி நியமனங்கள் செய்யப்படும் என்று தெரிவித்த திமுக அரசு, பணி நியமனம் செய்யாமல், இருக்கும் தொழிலாளர்களை வைத்தும்,ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமித்தும் துறையை நடத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளனர்.

முத்ரா கடன் திட்டம்: தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் 

சென்னை,பிப்.13- நெசவாளர்களுக்கான முத்ரா கடன்திட்டத்தை சிறப்பாக செயல்படுத் தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டு களாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது. நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தை ஒன்றிய அரசு  கடந்த 2016 ஜூன் மாதம் தொடங்கியது.  இந்த திட்டத்தின் மூலம், தொழில்  மூலதனம், நெசவு இயந்திரம் வாங்குதல் உள்ளிட்ட நெசவுத் தொழில்  தொடர்பான பணிகளுக்காக சலுகைக் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, தனிப்பட்ட நெசவாளர்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், நெசவாளர் அமைப்புகளுக்கு ரூ.20  லட்சம் மானியக் கடன் வழங்கப்படு கிறது. இதற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக் கப்படும். தகுதி வாய்ந்த நெசவாளர்க ளுக்கு, 3 ஆண்டுகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.

ஆளுநர் ரவி மீது திமுக விமர்சனம்

சென்னை,பிப்.13- ஆர்எஸ்எஸ் சொல்வதை ஆளுநர் ரவி அப்படியே பேசுவ தாக திமுக அமைப்புச் செயலாள ரும், மாநிலங்களவை உறுப்பினரு மான டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.  சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசை மறைமுகமாக சாடினார்.  இதையடுத்து, திமுக அமைப்புச்  செயலாளர் டி.கே.எஸ். இளங்கோ வன் அதற்கு பதில் அளித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர்  அளித்துள்ள பேட்டியில், “தலித்து களுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூக  மக்களுக்கும் கல்வியும் வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டது. திராவிட  ஆட்சி காரணமாகத்தான் அவர்க ளுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தது. இந்துத்துவ கொள்கை என்பது மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் பிறக்கும் போதே உயர் சாதியிலும், தாழ்த்தப் பட்ட சாதியிலும் பிறப்பதாக மனு தர்மம் கூறுகிறது. இது நமது கலாச் சாரம் அல்ல. வடக்கே இருந்து தமிழ் நாட்டிற்கு வந்தது இது. ஆளுநர்கள் மட்டுமின்றி, பாஜக தலைவர்கள் யாரும் பிரதமர் முதல்  கீழ்மட்ட உறுப்பினர்கள் வரை சுயமாக பேச முடியாது. பேசச்  சொன்னதைத்தான் பேச வேண்டும். சுயசிந்தனை உள்ளவர் களுக்கு பாஜகவிலோ ஆர்எஸ் எஸ்ஸிலோ இடமில்லை. உயரதி காரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்படிய வேண்டும்” என்று தெரி வித்திருக்கிறார்.

தேவாலயத்துக்குள் தீ வைத்த மர்ம நபர்கள்: ‘ராம்’ என எழுதி வைத்துவிட்டு தப்பியோட்டம்

போபால், பிப்.13 - மத்தியப் பிரதேசத்தின்,  சௌகி புரா கிராமத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக் குள் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கிறிஸ்தவ தேவாலயத்தின் உட்புறத் தில் தீ வைத்து, சுவரில்  ‘ராம்’ என எழுதிவைத்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுக்தாவா தொகு தியிலுள்ள சௌகி புரா கிராம த்தில் நடந்த சம்பவத்தில், தேவாலயத்தினுள் தீயால் கருகிய சுவரில் ‘ராம்’ என எழுதப்பட்டிருப்பதையும், சமய நூல்கள் சில எரிந்திருப் பதையும் உள்ளூர்வாசிகள் நேரில் கண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் போலீ சுக்கு தெரியவரவே, அடை யாளம் தெரியாத அந்த குற்ற வாளிகள் மீது, இந்திய தண்ட னைச் சட்டம் பிரிவு 295 (எந்த வகுப்பினரின் மதத்தையும்  அவமதிக்கும் நோக்கத்து டன் வழிபாட்டுத் தலத்தை தாக்குதல் அல்லது அசுத்தப் படுத்துதல்) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேசிய நர்மதாபுரம் காவல்  கண்காணிப்பாளர் குருகரன் சிங், “முதற்கட்ட விசாரணை யின்படி, மாவட்டத் தலை மையகத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தேவாலயத்துக் குள், அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து, ஜன் னல் வலையை அகற்றி உள் ளேயிருந்து தீ வைத்திருக் கின்றனர். சமய நூல்கள் சில உட்பட இதர பொருள்களும் தீயில் எரிந்து நாசமாகின” என்று தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

பெரும் அளவிலான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரியா வின் நான்கு மாகாணங்களை பேரிடர் பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது. அவசர, அவசரமாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். அரசுக் கட்டுப்பாட்டுக் குள் இருக்கும் எல்லைப்பகுதி மற்றும் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத  எல்லைப்பகுதி ஆகிய இரண்டின் வழியாகவும் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் நெருக்கடியால் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மோல்டோவாவின் பிரதமர் காவ்ரிலிதா அறிவித்துள்ளார். ஆகஸ்டு 2021-இல் இவர் பிரதமராகப் பொறுப் பேற்றார். அப்போது 17 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.  ஆனால், ஒரு துணைப்பிரதமர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகினர். எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க முடியாததால் தற்போது பிரதமரும் விலகிவிட்டார். அவரது பதவி விலகலை ஜனாதிபதி மாலா சண்டு ஏற்றுக் கொண்டார்.

 காசாத் திட்டுப் பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உறுதியான எதிர் நடவடிக்கைகளால் இந்தத் தாக்குதல்கள் தோல்வியையே சந்திக்கும் என்று கூறியுள்ள ஹமாஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஹசீம் காசிம், ‘‘நேப்ளஸ் மற்றும் அல் குட்ஸ் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளதால் ஒட்டுமொத்த பாலஸ்தீனமே தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது என்பது உறுதியாகிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிக்கிம் மாநிலத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் திங்களன்று அதிகாலை வேளையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தேசிய மையம் (NCS) உறுதிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி  13ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் சிக்கிமின் யுக்சோம் பகுதியில் இருந்து 70 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம்  பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை  27.81 மற்றும் தீர்க்கரேகை: 87.71, என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் கங்டோக்கில் இருந்து 116 கிமீ தொலைவில் இந்த யுக்சோம் நகர் உள்ளது.

அசாம் நவ்கான் மாவட்டத்தில் 2-ஆவது நாளாகவும் நிலநடுக்கம்!

அசாம் மாநிலம், நவ்கான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 என்ற ரிக்டர் அள வில் நிலநடுக்கம் பதிவானது. இந்நிலையில், திங்களன்று காலை 11.57 மணியளவில் பிரம்மபுத்ராவின் தெற்குக் கரையில் உள்ள அதே நவ்கான் மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்திலும், ஹொஜாய் நகருக்கு அருகில் உள்ள குவஹாத்தியிலிருந்து கிழக்கே 180 கிமீ தொலைவிலும் மையம் கொண்டி ருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இது மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது.

அதானி விவகாரத்தை ரிசர்வ் வங்கியே பார்த்துக் கொள்ளுமாம்!

அதானி குழும பங்குகள் சரிவு சர்ச்சை தொடர்பாக, ஏதேனும் குழு அமைக்கப்படுமா என்றால், “இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் அனுபவம் வாய்ந்தது, சிறந்த வல்லுநர்களை கொண்டுள்ளது.  எனவே அதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன்” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும், “புதிய வரி விதிப்பு முறை பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அதில் நிலை யான விலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் வெவ்வேறு அடுக்குகளுக்கு குறைந்த வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கைகளில் அதிக பணம் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிப்.14: பசுவிற்கு ரொட்டி கொடுக்கச் சொல்லும் உ.பி. அமைச்சர்!

பிப்ரவரி 14 காதலர் தினத்தை, மாடுகளை அரவணைக்கும் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு எழுந்த கடும் விமர்சனங்களை தொடர்ந்து அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேச விலங்குகள் நலவாரிய அமைச்சர் தரம்பால் சிங், காதலர் தினத்தில் மாட்டின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துங்கள் என்றும், மாடுகளுக்கு ரொட்டி வழங்கி, அதன் ஆசிர் வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். “பசு என்பது உலகத்தின் தாய் என்று வேதங்கள் கூறுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், பிரதமரின் நகைச்சுவை

“அடுத்த நிதியாண்டுக்குள், நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை (இன்றைய மதிப்பில் சுமார் ரூ. 412 லட்சம் கோடி) எட்டும் என இலக்கை பிரதமர் மோடி நிர்ண யித்துள்ளார். இது நகைப்புக்குரியது. தனிநபர் வருமானத்தைக் கொண்டுதான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றத்தை அளவிட முடியும். தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் பூடான் கூட நம்மை முந்திவிட்டன. முந்தைய காங்கி ரஸ் ஆட்சியைவிட தற்போதைய பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளும் சரிவைச் சந்தித்துள் ளன. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் ரூ.3 லட்சம்  கோடியை இழந்துள்ளோம்” என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி ரிஃபைனரி & பெட்ரோகெமிக்கல் என்ற எண்ணெய் சுத்தி கரிப்பு நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தொடர்ந்து செய்திகளை வெளி யிட்டவர் பத்திரிகையாளர் சசிகாந்த் வாரிஷே (48) ஆவார். இவர், அண்மையில் வெளியிட்ட செய்தி யில், விவசாயிகளின் நிலங்களை மிரட்டிப் பறிக்கும் பத்ரிநாத் அம்பேர்கர் என்பவர், பிரதமர் மோடி,  மகாராஷ்டிர துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரோடு இருக்கும் புகைப்படங்க ளையும் வெளியிட்டார். இதற்காக, நிலத்தரகர் அம்பேத்கர், பத்திரிகையாளர் சசிகாந்த் வாரிஷே-வை காரை ஏற்றிக் கொலை செய்தார். இந்நிலையில், வாரிஷே குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தேடியும் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் காணவில்லை!

பிரசாந்த் என்பவர் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலர் மற்றும் குடியரசுத் தலை வரின் செயலாளரிடம் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் என்ன காரணத்திற்காக அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார்? என்ற விவரத்தை யும் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சரவை செயலகம், அம்பேத்கர் கடந்த 1951 அக்டோபர் 11ம் தேதி ராஜினாமா செய்ததாகவும், இதுதவிர வேறு எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச்சட்ட விவகாரங்கள் பிரிவில் நீண்ட நேரம் தேடியும் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று குடியரசுத் தலைவரின் செயலகமும் அதே பதிலையே கூறியுள்ளது.

‘அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல’

“அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது. அதிகாரம் வெள்ளிக் கரண்டியுடன் பிறப்பதில்லை. அதிகாரம் வரும், போகும்.  மகாராஷ்டிரம் அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்கள் மீதான  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் இன்னும் வரவில்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்னும் வரவில்லை, எதுவும் நடக்க லாம், எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் (அர சாங்கம்) மாறலாம். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்”  என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார்.

‘முன்பு டீ விற்றார்.. இப்போது பொதுத்துறையை விற்கிறார்!’

‘‘பிரதமர் மோடி சிறு வயதில் டீ விற்று வந்தார். முதலில்  முதல்வர் ஆனவர், பின்னர் பிரதமரானார். இப்போது நாம் அனை வரும் அவரை தலைவராக நம்பியது துரதிர்ஷ்டவசமாகிவிட்டது.  பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்.  அவர் எப்போதும் விற்க தயாராக இருக்கிறார். டீ விற்பதைப் போலவே பொதுத்துறை நிறுவனங்களையும் அவர் விற்பனை செய்து  வருகிறார். நிதியமைச்சர் நிர்மலாம்மா அதற்கு துணையாக இருக்கிறார்’’ என தெலுங்கானா மாநில தொழிலாளர் மற்றும்  வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி விமர்சித்துள்ளார்.