சென்னை, டிச. 31- செவிலியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும் என எம்.ஆர்.பி. செவிலி யர் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கு.சசிகலா, பொதுச்செயலாளர் நே.சுபின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிர மாக பரவி இறப்பு விகிதம் அதிகரித்த நேரத்தில், கொரோனா நோய் சிகிச்சை பிரிவில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த செவிலியர்களை தமிழக அரசு, அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் சுமார் 2400 செவிலியர் பணி வழங்கி உத்தரவிட்டது. கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் இரண்டரை ஆண்டுகள் உயிரை பணயம் வைத்து கொரோனா சிகிச்சை பிரிவில் தினசரி 8 மணி நேரம் உடனிருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர். இப்பணியை தமிழக முதல்வர், ஊடகங்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தற்பொழுது மேற்கண்ட செவி லியர்கள் பணி நீக்கம் என்ற அரசாணை மிகுந்த வேதனையளிக்கிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட கொரோனா பிரிவு செவிலியர்களை மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் தற்காலிக பணியாளர்க ளாக பணி அமர்த்த தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இது தமிழக முதல்வர் வழங்கிய உறுதி மொழிக்கு எதிராக உள்ளது. மருத்துவ பணி யாளர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு வழியாக தேர்வு செய்யப்பட்டவர்களை இரண்டரை வருடங்கள் அவர்களை கொரோ னா பிரிவில் உச்சபட்ச உழைப்பினை பெற்றுக்கொண்டு தற்போது நிரந்தரமற்ற பணியில் பணி அமர்த்தும் நடவடிக்கை சமூக நீதிக்கு புறம்பான செயலாகும். தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 2500 செவிலியர் பணியி டங்கள் காலியாக உள்ள நிலையில், காலியா கவுள்ள செவிலியர் பணியிடங்களில் பணி அமர்த்தாமல், தற்காலிக செவிலியர்களாக மாற்றும் நடவடிக்கை தமிழக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கே ஆபத்தான சூழலையும் மற்றும் துறையில் உள்ள ஊழியர்களின் பணி பாதுகாப்புக்கு அச்சு றுத்தலான சூழலையும் ஏற்படுத்தும். நாட்டிலேயே கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்ததில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பும் சுகாதார பணியாளர்க ளுமே முக்கிய பங்கு வகித்தனர்.
ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு நிரந்தரத் தன்மை உடைய பணியிடங்களில் செவிலி யர்களை நிரந்தரத் தன்மையின்றி தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்துவது என்பது செவிலியர்களை வஞ்சிக்கும் விதமாக உள்ளது. மேலும் இதுபோன்ற நிரந்தரத் தன்மை யற்ற பணியாக மாற்றுவதால் வரும் காலங்க ளில் எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள் லாப நோக்கில் செயல் படும் தனியார் மயத்தை நோக்கி சென்று விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் மற்றும் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலையிட்டு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்க ளுக்கு பணிபாதுகாப்பு மற்றும் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.