சென்னை, ஜூன் 24 - தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்த உள்ள தாக எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு எம்.ஆர்.பி செவி லியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை யன்று (ஜூன் 24) சென்னையில் மாநிலத் தலைவர் சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் கூறியதாவது: திமுக தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிபடி, அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி நிரந்தர செவி லியர்களுக்கு இணையான பணி செய்யும் தொகுப்பூதிய செவிலியர்க ளுக்கும் ‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்க வேண்டும். தேசிய மருத்துவ கழகம் (என்எம்சி) பரிந்துரைப்படி படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் மருத்துவமனைகளில் தற்காலிக, ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும், 2021ம் ஆண்டு உயர்த்தப் பட்ட ஊதியம் 18 ஆயிரம் ரூபாயை கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு நிலுவைத் தொகை யுடன் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆக.23 அன்று சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தை (டிஎம்எஸ்) முற்றுகையிட்டு போராட் டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.