states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ம.பி. சிறுமியின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்ற காவல் அதிகாரி

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் உஜ்  ஜைனி பகுதியில்  கடந்த புதனன்று பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 12 வயது சிறுமி கிழிந்த ஆடை களுடன் தெருவில் உதவி கோரி அலைந்த கொடுமை நாட்டையே உலுக்கியது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பகுதி யில் அந்தச் சிறுமி சுற்றித் திரிந்தும்  யாரும் உதவவில்லை. அதன்பின்  மாலை நேரத்தில் சிறுமியின் நிலை மையை கண்ட காவல்துறையினர் ஒருவர் சிறுமியை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். சிறுமி  தற்போது இந்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். கொண்டுகொள்ளாத  பாஜக அரசு இந்த விவகாரம் தொடர்பாக  ஆளும் பாஜக அரசு, ஆட்டோ ஓட்டு நர் பாரத் சோனி (38) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது. எனினும் சிறு மிக்கு நிவாரணம், உயர்தர சிகிச்சை  பற்றி பாஜக அரசு கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், சிறுமி  பாலியல் வன்கொடுமை வழக்கை  விசாரித்து வரும் காவல் அதிகாரி  அஜய் வர்மா, சிறுமியின் மருத்து வம், கல்வி மற்றும் திருமணம் போன்ற பொறுப்புகளை தானே  ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள் ளார்.

மீனவ பெண்கள் தற்கொலைக்கு முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை என்ற கிராமம். மீன்பிடி தொழிலை முற்றிலும் நம்பியுள்ள இந்த புதுவலசை கிராமம் மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ள நிலை யில், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசை வீடுகளை அகற்ற சனியன்று  அதிகாரிகள் புதுவலசை கிராமத்திற்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து மீனவ பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை  முயற்சி செய்தனர். மீனவ பெண்களின் தற்கொலை முயற்சி தடுக்கப் பட்டாலும், எதிர்பாராவிதமாக குடிசை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது. 

ரேசன் கடைகளில் டேன்டீ தேயிலை தூள்: அமைச்சர் மதிவேந்தன்

குன்னூர், செப். 30- நீலகிரி மாவட்டம், குன்னூர்  டேன்  டீயில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சனை, குடியிருப்பு வசதி,  மற்றும் டேன் டீயை எவ்வாறு லாபத்தில் கொண்டு செல்வது, ஓய்வு பெற்ற டேன் டீ ஊழியர்களுக்கு முதல மைச்சர் அறிவித்தபடி வீடு கட்டி கொடுப்பது மற்றும் ரேஷன் கடைகளில் டேன் டீ யில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் விற்பனை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வற்புறுத்தினர்.இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரித்தார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- டேன் டீ ஊழியர்களின் கோரிக்கை களுக்கு தீர்வு காணப்படும் வகையில் டேன்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்வது என ஆய்வு செய்யப்பட்டது.மேலும் ரேசன் கடை மற்றும் சுற்றுலா தலங்களில் டேன் டீ தேயிலை தூளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2018-இல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையில்  54 பேருக்கு டெங்கு: அமைச்சர் தகவல்

சென்னை,செப்.30- சென்னையில் சனிக்கிழமை (செப்.30) ஒரு நாள் மட்டும் 54 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளில் பகுதிகள் சிறு  வட்டங்களாக பிரிக்கப்பட்டு வட்டங்கள்  தோறும் சுமார் 500 வீடுகள் கொண்ட  தெருக்களில் கொசு புழு வாழிடங்களான மேல்நிலை தொட்டிகள், சம்ப், கிணறு, தேவையற்ற டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், குடுவைகள் போன்றவைகளை கண்ட றிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர்.  டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் மருத்துவப்பணி களுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவி லியர்கள், 954 கொசு ஒழிப்பு பணி யாளர்கள் என மொத்தம் 4,231 மருத்துவ  பணியாளர்கள் பணி புரிந்து வருகின்ற னர். மேலும் போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வாச்சாத்தி தீர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு

சென்னை,செப்.30- வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம்  என்று தொல். திருமாவளவன் தெரிவித் திருக்கிறார். இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “சந்தன மரக் கடத்தல் வீரப்பனை தேடுவதாக சொல்லி  வாச்சாத்தி என்ற மலை கிராமத்தில் காவல்,  வருவாய், வனத்துறையினருமாக 250 க்கும் மேற்பட்டவர்கள் சென்று அந்த கிராமத் தையே அடித்து நொறுக்கி சின்னாபின்னப் படுத்தினார்கள். அங்கிருந்து பழங்குடி யினப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.  சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்ற  இந்த வழக்கில் 200 க்கும் மேற்பட்டவர் களை குற்றவாளிகள் என மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011  ஆம் ஆண்டு  தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி கள் மேல்முறையீடு செய்தனர்.  அந்த மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இப்போது  தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  215 பேரும்  குற்றவாளிகள் என அது உறுதிப்படுத்தி யுள்ளது. அத்துடன் அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத் துறை அலுவலர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகிய மூவர்  மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வன்கொடுமை சம்பவம் நடை பெற்ற போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினார். குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்  நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யப் பட்ட பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அதன் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைக்கு மாநிலச் செயலா ளராக இருந்த ஏ.நல்லசிவன் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் பின் னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால்  வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.  எனவே பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கூறி வழக்கு  தொடுத்தனர். அதை விசாரித்த உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டது. தமிழ்நாடு அரசு அப்போது சிபிஐ விசாரணையை எதிர்த்து வாதாடியது. ஆனால் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி காவல்துறையால் வாச்சாத்தி கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற நீண்ட சட்ட போராட்டத்தின் விளைவாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து உறுதியாகப் போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்க ளுக்கு துணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கி றோம்” என்று தெரிவித்துள்ளார்.