புதுதில்லி, ஜன.4- ‘மதமாற்றங்கள் அனைத்தையுமே சட்ட விரோதம் எனக் கூற முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. மத மறுப்புத் திருமண விவகாரம் தொடர் பாக மத்தியப்பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் அம லில் உள்ளது. ‘மத்திய பிரதேச மதச் சுதந்திர சட்டம் (எம்பிஎப்ஆர்ஏ) 2021’ என்ற இந்த சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ், மாநிலத்தில் மத மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் 60 நாட்களுக்கு முன்பாக மதமாற்றத்துக்கான நோக்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் அறி விக்க வேண்டும். அதன் பிறகே, சட்டப்படி திரு மணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டப் பிரிவை எதிர்த்து, மாநில உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘இந்தச் சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசு நட வடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்களை கடந்த 2022 நவம்பர் 14 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், “விருப் பப்படி கலப்புத் திருமணம் செய்துகொள் ளும் தம்பதியர், மாவட்ட ஆட்சியரிடம் முன் கூட்டியே அதற்கான நோக்கத்தை அறிவிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிரானது.
எனவே, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம் பதியினர் மீது எம்பிஎப்ஆர்ஏ சட்டப் பிரிவு 10-இன் கீழ் மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மத்தி யப் பிரதேச மாநில அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘சட்டவிரோத மதமாற்றத் துக்கு திருமணம் கருவியாக பயன்படுத்தப் படுகிறது. இதனை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்க முடியாது. எனவே, உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரினார். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்ட நீதிபதிகள், ‘மதமாற்றங்கள் அனைத்தை யுமே சட்ட விரோதம் எனக் கூற முடியாது’ என்று தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுக்களுக்கு ம.பி. பாஜக அரசு 3 வாரங்களுக்குள் பத்தி வாரியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு, அடுத்த 21 நாள்களுக்குள் மனுதாரர்கள் பதி லளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்த ரவிட்டனர். அடுத்த விசாரணையையும் பிப்ர வரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.