புதுதில்லி, டிச.15- இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல், கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் குறைக்கப்படாதது ஆகிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் வியாழ னன்று மூன்றாவது நாளாக நாடாளு மன்றத்தில் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழனன்று தொடர்ந்து 3-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வழங்கிய அந்த நோட்டீஸில் இந்திய - சீன எல்லை மோதல் குறித்த பல கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. “’அன்று கல்வான் தாக்குதல், இன்று தவாங்கில் தாக்குதல். ஏன் இதெல்லாம் நடக்கிறது? சீனாவின் எண்ணம் என்ன? இந்திய பகுதியை ஏதேனும் சீனா கைப்பற்றியுள் ளதா?” என்பன போன்ற கேள்விகளுக்கு மோடி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படாத பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சர்வதேச சந்தையில், கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 50 டாலர்கள் அளவிற்கு குறைந்து, தற்போது வெறும் 76 டாலர்களுக்கு விற்கப் படுகிறது. ஆனாலும், இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட பெட்ரோ லிய எரிபொருட்களின் விலையை கொஞ்ச மும் குறைக்கவில்லை. கடந்த 200 நாட்க ளுக்கும் மேலாக, பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகள், டீசல் 94 ரூபாய் 24 காசு கள் என்ற விலையிலேயே (சென்னையில்) மாற்றமின்றி தொடர்கிறது. சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 50 டாலர்கள் (சுமார் 4 ஆயிரத்து 130 ரூபாய்)வரை விலை குறைந்தும், இந்தியாவில் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. வியாழனன்று நாடாளுமன்றம் கூடிய தும் இந்த விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் கிளப்பின. பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பின. மோடி அரசானது, கச்சா எண் ணெய் விலைச் சரிவின் பயன், நாட்டு மக்க ளுக்கு கிடைத்து விடாதபடி தடுத்து, கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மிக வும் ஏளனமான முறையில் பதிலளித்தார். முதலில், “நீங்கள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரி யை குறையுங்கள்” என்று எதிர்க்கட்சி களைப் பார்த்துக் கூறினார். “மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் பெட்ரோ லியப் பொருட்களின் மீதான வாட் வரி யைக் குறைக்காததால், அங்கு பெட்ரோல் - டீசல் விலை உயர்கிறது” என்று பொய் யான காரணத்தைக் கூறினார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த இந்த பதில் திருப்தி அளிக்காத தால் மக்களவையில் காங்கிரஸ் தலை மையிலான எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகள் தொடர்பாக, மாநிலங்கள வையும் வியாழனன்று மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும், விலைவாசி உயர்வு, வேலை யின்மை மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பின. இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்படவே, 11.33 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப் பட்டது. 11.34 மணிக்கு அவை கூடிய போதும், எதிர்க்கட்சிகள் இதே கோரிக்கை யை முன்வைத்ததால், 11.50 மணி வரை இரண்டாவது முறையாக மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.