states

ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் விலை அறிவித்திடுக!

ஒன்றிய அரசுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூன் 29-  9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட  ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய அரசு ரூ.5 ஆயிரம் விலை அறிவித்திட வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் டி.ரவீந்தி ரன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: 2023-24 பருவத்திற்கு 9.5 சத வீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு  டன்னுக்கு ரூ.2919, 10.25 சதவீதம் பிழி  திறனுக்கு டன்னுக்கு ரூ.350ம் விலை யை நிர்ணயித்து ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு  ஒரு டன்னுக்கு ரூ.2821 விலை அறி வித்த பாஜக அரசு, எதிர்வரும் ஆண்  டுக்கு டன்னுக்கு வெறும் 98 ரூபாய்  மட்டும் விலையை உயர்த்தியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஐந்து  கோடி கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. உரம், டீசல், பூச்சி மருந்து, இயந்திரங்களின் விலைகளை உயர்த்தி விட்டு, கரும்புக்கு விலை யை உயர்த்தித் தராமல், விவசாயி களின் பாதுகாவலன் என்று கூறிக் கொள்ளும் மோடியின் பாஜக அரசு  கரும்பு விவசாயிகளுக்கு வஞ் சனை செய்துள்ளது.

ஐந்து ஆண்டுகளில் டன்னுக்கு  ரூ.161 மட்டுமே விலை உயர்த்தப் பட்டுள்ளது. 2019-20 இல் 9.5 சதம் பிழிதிறனுக்கு விலை டன்னுக்கு - ரூ. 2750, 2020-21 இல் - ரூ. 2750,  2021-22 இல் - ரூ. 2755, 2022-23 இல் - ரூ.  2821, 2023-24 இல் - ரூ. 2919 ஆகும்.  2019-20 இல் 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.2750 விலை அறிவித்த ஒன்றிய  பாஜக அரசு 2023-24 பருவத்துக்கு டன்னுக்கு ரூ.2919 மட்டுமே விலை  உயர்த்தியுள்ளது. கடந்த ஐந்தாண்டு களில் ஒரு டன் கரும்புக்கு ரூ.169 மட்டுமே விலையை ஒன்றிய மோடி  அரசு உயர்த்தியுள்ளது. கடந்த ஐந்  தாண்டுகளில் உரம், டீசல், இயந்தி ரங்கள் விலை உயர்ந்துள்ளது. உண்  மையான உற்பத்தி செலவை கணக்கிட்டு அத்துடன் 50 சதவீதம்  கூடுதலாக சேர்த்து விலை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசு புறந்தள்ளிவிட்டு கரும்பு  உற்பத்தி செலவை குறைத்து காட்டி யுள்ளது. வெட்டுக்கூலி உயர்ந்து, கரும்பு உற்பத்திச் செலவு உயர்ந் துள்ள சூழலில், கரும்பு உற்பத்திச் செலவு விவசாயி குடும்ப உழைப் புக்கான ஊதியத்தையும் சேர்த்து (A2+FL) 2023-24 ஆண்டுக்கு டன்  னுக்கு ரூ.1570 என சிஏசி (CAC)  கணக்கிட்டு கரும்பு உற்பத்திச்  செலவை மிகவும் குறைத்து மதிப் பிட்டு, கரும்பு உற்பத்திச்செலவுடன் பிரதமர் மோடி 100 சதவீதம் விலை உயர்வை அறிவித்துள்ளதாக ஒன் றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி யுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு வெட்டுக் கூலி மட்டுமே ரூ.1500 வரை விவசாயிகள் தருகின்ற னர். இது உற்பத்திச் செலவில் சேராதா? நாடு முழுவதும் உள்ள  5 கோடி கரும்பு விவசாயிகள், 5 லட்சம் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப் படாமல் கரும்புக்கு குறைந்த விலை யை அறிவித்துள்ள ஒன்றிய பாஜக  அரசை தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கி றது. 

பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு நிதி மறுப்பு

பாஜக ஆட்சியாளர்கள் கரும்  புக்கு விலை அறிவிக்கும் பிழி திறனை 10.25 சதவீதமாக உயர்த்தி விட்டனர். கரும்பு கட்டுப்பாடு சட் டத்தை நீர்த்துப் போக செய்து வரு கின்றனர். நாடு முழுவதும் உள்ள  262 கூட்டுறவு மற்றும் 67 பொதுத்  துறை சர்க்கரை ஆலைகளை பாது காத்திட மாநில அரசுகளுக்கு நிதி அளித்திட மறுத்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகள் வேளாண் சந்தையை கபளீகரம் செய்திட மோடி அரசு பாதை அமைத்துத் தருகிறது. இவற்றை எதிர்த்து விவ சாயிகள் ஒன்றிணைத்து போராடு வோம். ஒன்றிய பாஜக அரசு 9.5 சத வீதம் பிழிதிறன் கொண்ட ஒரு டன்  கரும்புக்கு ரூ.5 ஆயிரம் விலை அறி வித்திட வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.