திருவனந்தபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி ஆளும் கேரளாவின் வழிமுறைகளை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த மிசோரம் எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ள தாக கேரள தொழில் அமைச்சர் பி.ராஜிவ் கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், “மிசோர மிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கேரளா வருகை தந்தது. கேரளாவில் பொதுத்துறைகள் எப்படி வெற்றிகரமாக செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள மிசோரம் எம்எல்ஏக்கள் பயணம் மேற்கொண்டனர். கேரளாவின் வழிமுறை களை மிசோரமில் செயல்படுத்த விருப்ப மும் தெரிவித்துள்ளனர். 2030க்குள் ரூ.9467 கோடி முதலீடுகளை பெற ஒரு பரந்த திட்டத்தின் அடிப்படையில் பொதுத்துறை கள் கேரளாவில் செயல்பட உள்ளன. தொழில் தொடங்க எளிதான வழிமுறை கள் கொண்ட முதல் தர மாநிலம் எனும் பெருமை கேரளாவுக்கு கிடைத்த பின்பே மிசோரம் எம்எல்ஏக்கள் பயணம் மேற் கொண்டுள்ளனர். கேரளாவின் வளர்ந்து வரும் தொழில் துறையின் தன்மையை இது எடுத்துக் காட்டுகிறது” என அவர் கூறினார்.