சென்னை, ஜூன் 28- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரண மாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு நான்கு அடைப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதனிடையே நீதிமன்ற காவல் வியாழக்கிழமையுடன் (ஜூன் 28) முடி வடையும் நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காவேரி மருத்துவ மனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, எப்படி இருக்கிறீர்கள்? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேட்டறிந்தார். அதற்கு வலி இருப்ப தாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.