states

img

மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு எப்போது?

சென்னை,ஜூன் 21-  ஸ்மார்ட் மீட்டர் பொருத் தப்பட்ட பிறகு, மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை அமல் படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையில் பெய்த கனமழையால், பட்டினப் பாக்கம் துணை மின் நிலை யத்திலுள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மின் விநி யோகம் தடைபட்டது. இதை யடுத்து, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: ஜூன் மாதத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக, பழு தடைந்துள்ள மின்சாதனங் களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பொதுமக்களுக்கு தடை யில்லா மின்சாரம் வழங்கு மாறு முதல்வர் அறிவுறுத்தி யுள்ளார். கனமழையால் பட்டினப் பாக்கம் துணை மின் நிலை யத்திலுள்ள மின்மாற்றி பழு தடைந்து, அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. எனவே உடனடியாக வேறொரு மின்மாற்றி பொருத்தப்பட்டது. அதுவும்  பழுதடைந்ததால், இன் னொரு மின்மாற்றி பொருத்தி சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. பருவமழையின் போது மின் விநியோகத்தில் ஏற்ப டும் பாதிப்புகளை கண் காணித்து தடுக்க குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் உடனிருந்த னர்.